தேர்தலில் பிரதமர் மோடி மேட்ச் பிக்ஸிங் செய்ததாக கூறிய விவகாரம்... ராகுல் காந்தி மீது பாஜக புகார்!
மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி 'மேட்ச் பிக்ஸிங்' செய்கிறார் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கூறிய கருத்தை குறிப்பிட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது..
இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “ஒரு சில கோடீஸ்வரர்களின் உதவியுடன் மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி மேட்ச் ஃபிக்சிங் செய்து வருகிறார். ஏற்கனவே இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈவிஎம் இல்லாமல் பாஜகவால் 180 இடங்களை கூட வெல்ல முடியாது. பாஜகவால் என்னுடைய குரலை ஒடுக்க முடியாது. காங்கிரஸின் அனைத்து வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சி தலைவர்களை கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதை பிரதமர் நரேந்திர மோடி விரும்பவில்லை” என தெரிவித்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடி மேட்ச் பிக்ஸிங் செய்கிறார் என ராகுல் காந்தி கூறிய கருத்தால் பாஜக அதிருப்தி அடைந்தது. இதையடுத்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண் குமார் ஆகியோர் அடங்கிய அக்கட்சியினர், ராகுல் காந்தி மீது இன்று (ஏப். 1) டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் புகார் அளித்தனர்.