For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

”தென்னை விவசாயிகளுக்குத் தோள் கொடுக்கும் பிரதமர் மோடி அரசு”- நயினார் நாகேந்திரன்...!

மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மில்லிங் கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக தமிழ் நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
02:51 PM Dec 13, 2025 IST | Web Editor
மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மில்லிங் கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக தமிழ் நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
”தென்னை விவசாயிகளுக்குத் தோள் கொடுக்கும் பிரதமர் மோடி அரசு”  நயினார் நாகேந்திரன்
Advertisement

தமிழ் நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 

Advertisement

”பிரதமர்  நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மில்லிங் கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதார விலையைக் குவிண்டாலுக்கு ₹445-ம், பால் கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதார விலையைக் குவிண்டாலுக்கு ₹400-ம் உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

வெள்ளை ஈ தாக்குதலாலும், வாடல் நோயாலும் பரிதவித்து வரும் தென்னை விவசாயிகளின் துயர் துடைத்து, அவர்களின் நல்வாழ்வுக்கு வழிவகுக்கும் வண்ணம் கொப்பரைத் தேங்காய்க்கான ஆதார விலையை உயர்த்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்குத் தமிழக விவசாயிகள் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்”

என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement