For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் மலரும் தாமரை? கதறி அழுத பாஜக உறுப்பினர்!

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 45 இடங்களில் முன்னிலை வகித்து வருவதை ஒட்டி பாஜக உறுப்பினர் புனித் வோஹ்ரா உணர்ச்சிவசப்பட்டு கதறி அழுதார்.
12:56 PM Feb 08, 2025 IST | Web Editor
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 45 இடங்களில் முன்னிலை வகித்து வருவதை ஒட்டி பாஜக உறுப்பினர் புனித் வோஹ்ரா உணர்ச்சிவசப்பட்டு கதறி அழுதார்.
27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் மலரும் தாமரை  கதறி அழுத பாஜக உறுப்பினர்
Advertisement

70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 5ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் அரிவிந்த கெஜ்ரிவால், தற்போதைய முதலமைச்சர் அதிஷி உள்பட 699 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக இடையே மும்முனை போட்டி நிலவியது. இந்த தேர்தலில் 60.54 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த நிலையில், டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Advertisement

தற்போதைய நிலவரப்படி பாஜக 45 இடங்களிலும், ஆம் ஆத்மி 25 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதன்மூலம், பாஜக பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் முன்னிலை வகிக்கிறது. புதுடெல்லி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான கெஜ்ரிவால் மற்றும் தற்போதைய முதலமைச்சர் ஆதிஷி , ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்களான மனிஷி சிசோடியா, சோம்நாத் பார்தி ஆகியோரும் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.

அரவிந்த் கெஜ்ரிவால் பின்னடைவு சந்தித்து இருப்பது ஆம் ஆத்மி கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த முறை டெல்லியில் பாஜக ஆட்சியை பிடிக்கு என அக்கட்சியினர் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் பாஜகவினர் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். இதன்மூலம், 27 ஆண்டுகள் கழித்து பாஜக டெல்லியில் ஆட்சி அமைக்க உள்ளதாக தெரிகிறது. இதனால், கொண்டாட்டத்தின் போது பாஜக உறுப்பினர் புனித் வோஹ்ரா உணர்ச்சிவசப்பட்டு கதறி அழுதார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது.

Tags :
Advertisement