For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

டெல்லியில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
08:00 AM Feb 08, 2025 IST | Web Editor
டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
டெல்லியில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்  வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
Advertisement

70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 5ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் அரிவிந்த கெஜ்ரிவால், தற்போதைய முதலமைச்சர் அதிஷி உள்பட 699 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் ஆம்ஆத்மி, காங்கிரஸ், பாஜக இடையே மும்முனை போட்டி நிலவியது. இந்த தேர்தலில் 60.54 சதவீத வாக்குகள் பதிவாகின.

Advertisement

ஓட்டுப்பதிவின் போது 13,767 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் 70 வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. மேலும், அங்கு அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன. மேலும், 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தன.

இந்த நிலையில், டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கைக்காக 19 மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. அதேவேளை, வாக்கு எண்ணும் அதிகாரிகள், போலீசார் என மொத்தம் 5 ஆயிரம் பேர் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து, காலை 11 மணியளவில் முன்னிலை நிலவரம் தெரியவரும்.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை தக்கவைக்குமா?, பாஜக, காங்கிரஸ் ஆட்சியை பிடிக்குமா? என்பது காலை 11 மணியளவில் தெரியவரும். டெல்லி தேர்தல் முடிவுகளை நாடே எதிர்பார்த்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement