Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"ஜெய்பீம் பார்த்தேன், உள்ளம் உலுக்கியது" என சொன்ன முதலமைச்சர் எங்கே? - இபிஎஸ் கேள்வி

விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவத்திற்கு இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
02:36 PM Jun 29, 2025 IST | Web Editor
விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவத்திற்கு இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Advertisement

நகை மாயமான சம்பவம் தொடர்பாக அஜித்குமார் என்ற இளைஞர் விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டார். இதனையடுத்து அவர் காவல்நிலையத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமாக எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,

"சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் என்பவர் பெண் பக்தரின் காரில் இருந்த ஒன்பதரை பவுன் நகையை திருடி விட்டதாக வந்த புகாரை அடுத்து, திருபுவனம் காவல்துறை அஜித் குமாரை கைது செய்து விசாரணை செய்ததாகவும், அச்சமயத்தில் காவலரின் தாக்குதலால் அஜித் குமார் மரணம் அடைந்து விட்டதாகவும் அவரின் உறவினர்கள் இறந்த அஜித் குமாரின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். "ஜெய்பீம் படம் பார்த்தேன். உள்ளம் உலுக்கியது" என சினிமா Review எழுதிய முதலமைச்சர் எங்கே இருக்கிறார்?

விக்னேஷ் லாக்கப் மரணத்தின் போது, சட்டப்பேரவையிலேயே பச்சைப்பொய் பேசியவர் தானே நீங்கள்? இதற்கும் அதே போல் பொய் தான் பதிலாக வருமா? தவறு செய்ததாக காவல்துறை கருதினால், கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து, உரிய சட்ட நெறிமுறையை பின்பற்ற வேண்டுமே தவிர, சட்டத்தை தங்கள் கைகளில் முழுமையாக காவல்துறை எடுத்துக்கொள்ள கூடாது. தன்னுடைய நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையைக் கூட நிர்வகிக்கத் தெரியாத முதலமைச்சருக்கு எனது கடும் கண்டனம்.

திருபுவனம் காவல் நிலையத்தில் கோயில் காவலாளி அஜித் குமார் மரணம் அடைந்த நிகழ்வு குறித்து முழு உண்மையை வெளி கொண்டுவர உடனடியாக மாவட்ட நீதிபதி தலைமையில் குழு அமைத்து, முழு விசாரணை நடத்தி, இந்த மரணத்திற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், மேலும் இறந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க திமுக அரசை வலியுறுத்துகிறேன்"

இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Tags :
ADMKAIADMKCMO TAMIL NADUedappadi palaniswamiEPSMK StalinPolicesivaganga
Advertisement
Next Article