பாமகவில் நடப்பது குடும்ப பிரச்சினை - முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி பேட்டி!
கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பகவதியின் இல்ல திருமண வரவேற்பு விழாவிற்கு பின் பொள்ளாச்சி அருகே உள்ள நாய்க்கன்பாளையம் கிராமத்தில் அவரது இல்லத்திற்கு வந்த முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கட்சி நிர்வாகிகளை சந்தித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசியவர்,
"உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏதோ தமிழகத்தின் மீது படையெடுத்து கைப்பற்றுவது போல பேசியிருக்கிறார். எதற்காக இந்த பேச்சு என்பது தெரியவில்லை. தேர்தல் என்றால் அனைவரும் போட்டியிடுவது இயல்பு. தேர்தலில் நின்று வெற்றி பெறுவதில் தவறில்லை, ஆனால் இதுவரை தமிழகத்தில் வெற்றி பெறாத நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட 10 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று சொன்னார்கள்.
கடைசியாக கோவை பொள்ளாச்சியில் வெற்றி பெறுவோம் என்று சொன்னார்கள் அங்கேயும் வெற்றி பெறவில்லை. ஆனால் ஆட்சி அமைப்போம் என்று சொல்வதில் என்ன பொருள் உள்ளது. அது உங்களது ஆசையாக இருக்கலாம். அதற்காக தமிழ்நாட்டில் சிறப்பாக ஒரு ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அதை இழிவு படுத்துவது போல் பேசுவது வேடிக்கையாக உள்ளது. பாஜக ஆளும் மாநிலத்தை தமிழகத்தை ஒப்பிட்டு பாருங்கள் உத்தரப்பிரதேசம், பிஹார், உயர்ந்திருக்கிறதா? தமிழகம் உயர்ந்திருக்கிறதா? வளர்ச்சி குன்றிய, குற்றங்கள் மட்டுமே நடைபெறுகின்ற இரு மாநிலங்களை வைத்துக் கொண்டு தமிழகத்தில் கொலை கொள்ளை நடக்கிறது என்று சொன்னால் என்ன பொருள் உள்ளது.
மக்களை திசை திருப்புகிற ஒரு செயல் பாஜகவால் சிறந்த ஆட்சியை இந்தியாவில் வழங்க முடியவில்லை பஹல்காமில் தீவிரவாதிகள் அப்பாவி மக்களை சுட்டுக் கொன்றார்கள். இந்தியாவே எதிராக நின்றது தீவிரவாதிகள் எங்கு சென்றார்கள்? உளவுத்துறை என்ன நடவடிக்கை எடுத்தது? ஏன் இன்னும் அந்த தீவிரவாதிகளை பிடிக்க முடியவில்லை? சட்டத்தின் முன்பு நிறுத்த முடியவில்லை? இதற்கு ஏதாவது காரணம் என்ன என அமித்ஷா சொல்லியிருக்கிறார்களா?
இந்தியாவில் அந்த அளவுக்கு தான் எல்லை பாதுகாப்பு இருக்கிறதா? இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் உள்ளது இதை சொன்னால் தேச ஒற்றுமைக்கு கெடுதல் என்று சொல்கிறார்கள். அது நாட்டில் யுத்தம் நடக்கும்போது எந்த முதல்வர் தேசிய கொடியை கையில் ஏந்தி கொண்டு ஊர்வலமா போனாரு மக்களிடம் எடுத்துச் சொல்வதற்காக காங்கிரஸ் கட்சி உறுதியாக நிற்கிறது.
கூட்டணி குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைமை முடிவதற்கும் அதிமுகவுடன் இன்னும் பல கட்சிகள் கூட்டணி சேரும் என எடப்பாடி பழனிச்சாமி பேச்சு குறித்த கேள்விக்கு உத்தர பிரபிரதேசம் பீகாரில் இருந்து கட்சியில் வந்து சேர்ந்தால்தான் உண்டு. இருக்கிற கட்சிகள் எல்லாம் கூட்டணி சேர்ந்து விட்டார்கள், வெளியில் இருந்து யாராவது வந்தால் தான் உண்டு என கிண்டல் அடித்தார்.
பாமகவில் நடப்பது குடும்ப பிரச்சினை ஒரு கட்சி யாரோடு கூட்டணி வைப்பார்கள் என்பது அவர்கள் நலன், கொள்கை, பார்வை சார்ந்தது கொள்கை சார்ந்த கூட்டணி. மதசாரசார்பின்மை என்ற அச்சாணியில், அமைப்பில் மனிதர்கள் இடையே வேறுபாடு இல்லாத விஷயத்தில் ஒன்றாக உள்ளோம். நீண்ட காலமாக கூட்டணி உள்ளது எங்கள் வலிமையான கூட்டணி என தெரிவித்தார்.