“இதற்காகத்தான் முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்படுகிறது” - நயினார் நாகேந்திரன் விளக்கம்!
இந்து முன்னணி சார்பில் மதுரை பாண்டி கோயில் அருகே உள்ள அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண், மற்றும் அதிமுக அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, கே.டி.ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், “முருகா முருகா என்று சொன்னால் உருகாதோர் யாரும் இல்லை. முருகா எனும் பெயரில் மெல்லினம், இடையினம், வல்லினம் இருப்பதால் முருகனை தமிழ் கடவுள் என சொல்கிறோம். தமிழ்நாடு அரசிடம் இருந்து நமக்கு நீதி கிடைக்குதோ இல்லையோ, நீதிமன்றத்தில் இருந்து நமக்கு நீதி கிடைத்துள்ளது.
மதுரை மண்ணில் முருக பக்தர்கள் மாநாடு நடத்துவது நமக்கெல்லாம் பெருமை. முருக பக்தர்கள் மாநாட்டிற்கு எத்தனையோ தடைகள் செய்தார்கள். தடைகள் உடைக்கப்பட்டு முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கண்டனம் ஒரே பண்பாடு கலாச்சாரம், அதனால் அம்மொழி படிக்க சொல்கிறோம். ஒருமித்த கலாச்சாரங்கள் மாறிவிடக்கூடாது என்பதற்காக முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்படுகிறது”
இவ்வாறு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.