For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“விமான நிலையத்தில் இனி செய்தியாளர்கள் சந்திப்பு இல்லை” - அண்ணாமலை!

04:50 PM Jun 11, 2024 IST | Web Editor
“விமான நிலையத்தில் இனி செய்தியாளர்கள் சந்திப்பு இல்லை”   அண்ணாமலை
Advertisement

இனிமேல் விமான நிலையங்களில் செய்தியாளர்களை சந்திக்க மாட்டேன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisement

டெல்லியில் நடைபெற்ற பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டம் மற்றும் மத்திய அமைச்சரவை பதவியேற்பு விழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டிருந்தார். இந்த நிலையில், இன்று (ஜூன் 11) கோவை விமான நிலையத்துக்கு வருகை தந்த அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுக்க முயற்சித்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் அண்ணாமலை, “இனிமேல் விமான நிலையங்களில் செய்தியாளர்களை சந்திக்க மாட்டேன். பாஜக அலுவலகங்களில் மட்டுமே பேட்டி அளிப்பேன். முறைப்படி 24 மணிநேரத்துக்கு முன்னதாகவே செய்தியாளர்கள் சந்திப்புக்கான தகவல் அளிக்கப்படும். நான் மட்டுமல்ல பாஜகவில் யாரும் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திக்க மாட்டார்கள். செய்தியாளர்கள் சந்திப்பு எல்லாம் முறையாக கட்சி அலுவலகத்தில் தான் நடைபெறும்” எனத் தெரிவித்தார்.

தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி போட்டியிட்ட 39 மக்களவைத் தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது. கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை, திமுக வேட்பாளரிடம் 1.18 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement