For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"முருக பக்தர்கள் மாநாடு தமிழ்நாடு அரசியலை புரட்டிப்போடும்" - எல்.முருகன் பேட்டி

முருக பக்தர்கள் மாநாடு தமிழ்நாட்டு அரசியலை புரட்டிப்போடும் மாநாடாக இருக்கும் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
07:32 AM Jun 22, 2025 IST | Web Editor
முருக பக்தர்கள் மாநாடு தமிழ்நாட்டு அரசியலை புரட்டிப்போடும் மாநாடாக இருக்கும் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
 முருக பக்தர்கள் மாநாடு தமிழ்நாடு அரசியலை புரட்டிப்போடும்    எல் முருகன் பேட்டி
Advertisement

இந்து முன்னணி சார்பில் மதுரை பாண்டிகோயில் அருகே உள்ள அம்மா திடலில் இன்று மாலை முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. முன்னதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று மாலை மாநாட்டு திடலில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியபோது,

Advertisement

"முருக பக்தர்கள் மாநாட்டிற்கு 10 லட்சம் பேரும் வருகை தர உள்ளனர். மாநாடு நடைபெறும் மாலை 6:00 மணியளவில் அனைவரும் ஒன்றாக இணைந்து கந்த சஷ்டி கவசம் பாட இருக்கிறோம். அதேபோன்று உலகம் முழுவதும் இருக்கிற அனைத்து முருக பக்தர்களும் ஏதாவது ஒரு காரணத்தினால் வர முடியாமல் வீட்டில் இருந்தால், வீடுகளில் இருந்து கொண்டு கந்த சஷ்டி கவசத்தை பாட வேண்டுமென மாநாட்டு குழுவின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். கந்த சஷ்டி கவசத்திற்கு அப்படி ஒரு சக்தி உள்ளது. தமிழ்நாடு அரசியலிலும், ஆன்மீகத்திலும் மிகப்பெரிய தாக்கத்தையும் அதிர்வலையையும் ஏற்படுத்துகின்ற மாநாடாக இந்த மாநாடு இருக்கும். தமிழ்நாடு ஆன்மீக பூமி என்பதை இந்த மாநாடு நிரூபிக்க இருக்கிறது.

தமிழ்நாடு நாயன்மார்களும், ஆழ்வார்களும், சித்தர்களும் வாழ்ந்து வந்தனர். பல லட்சம் பேர் முருக பக்தர்கள் மாநாட்டில் ஒருங்கிணைந்தது ஆதங்கத்தை தீர்ப்பது, கந்த சஷ்டி கவசத்தை படிப்பது என உள்ளனர். முருகப்பெருமானை வழிபடுவதற்காகவும் மக்கள் வருகை தர இருக்கிறார்கள். இந்த மாநாடு மிகப்பெரிய மாநாடாக அமையும். இந்த மாநாடு முடிந்த பின்னர் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைவது நிர்ணயிக்கப்பட்ட ஒன்று உறுதி செய்யப்பட்ட ஒன்றாக இந்த மாநாடு உடைய வெளிப்பாடு இருக்கும். உளுந்தூர்பேட்டையில் இருந்து வாகனங்கள் சாரை சாரையாக வந்து கொண்டிருக்கின்றன. இது ஒரு மக்கள் சுனாமி என்று சொல்லும் அளவிற்கு இந்த மாநாடு இருக்கும், இந்த முருக பக்தர்கள் மாநாடு தமிழ்நாடு அரசியலை புரட்டிப்போடும் மாநாடாக இருக்கும்.

மாநாடு நடைபெறும் திடலை காவல்துறை தரப்பில் கலைஞர் திடல் என கூறப்பட்டது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது அம்மா திடல் என்பது நாங்கள் வைத்த பெயர். இந்த மாநாட்டை தடை செய்ய காவல்துறையினர் பல்வேறு முயற்சிகளை எடுத்தார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த மாநாட்டை சிறப்பாக நடத்த வேண்டும் முருக பக்தர்கள் ஒருங்கிணைய வேண்டும் என நாங்கள் இந்து முன்னணி சார்பாக ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். சட்டத்தின் மூலமாக நீதித்துறையின் மூலமாக ஒவ்வொரு முறையும் அவர்களிடமிருந்து நிவாரணம் பெற்றுள்ளோம்.

முருக பக்தர்கள் மாநாட்டிற்கு பக்தர்களின் வருகை திமுகவிற்கு மிக பெரிய பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் செல்ல எனக்கு தடை விதித்தனர். பல்வேறு இடைஞ்சல்களை செய்து வருகிறார்கள்" என்றார். சங்கிகள் தான் எங்களுக்கு எதிரானவர்கள் என்று அமிர் பேசியது குறித்த கேள்விக்கு, "நாம் ஒரு மாநாடு நடத்திக் கொண்டிருக்கிறோம் இந்த மாநாட்டை பற்றி வேறொருவர் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. மாநாட்டுக்கு சம்பந்தம் இல்லாத நபர், முருக பக்தர்கள் மாநாடு பற்றி பேசக்கூடாது. தானாக முன் வந்து முருக பக்தர்கள் கூடுவதை இழிவு சொல்வதை முருக பக்தர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்" என்று தெரிவித்தார்.

Tags :
Advertisement