For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஜாபர் சாதிக்கிற்கு 7 நாள் போலீஸ் காவல் விதித்தது டெல்லி நீதிமன்றம்!

07:12 PM Mar 09, 2024 IST | Jeni
ஜாபர் சாதிக்கிற்கு 7 நாள் போலீஸ் காவல் விதித்தது டெல்லி நீதிமன்றம்
Advertisement

போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் கைதான ஜாபர் சாதிக்கிற்கு 7 நாட்கள் போலீஸ் காவல் விதித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

டெல்லியில் கடந்த மாதம் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.  தொடர்ந்து,  அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்,  இந்த கடத்தலில் திரைப்பட தயாரிப்பாளரும்,  திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் முக்கிய பங்காற்றியது தெரிய வந்தது.

இதையடுத்து,  ஜாபர் சாதிக்கிற்கு சொந்தமான இடங்களில் மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.  தொடர்ந்து,  ஜாபர் சாதிக் நேரில் ஆஜராகும்படி அவரது வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய அதிகாரிகள்,  அவரது வீட்டிற்கு சீல் வைத்தனர்.  இந்நிலையில், கடந்த சில வாரங்களாக தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக் ராஜஸ்தானில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.  அதன் அடிப்படையில் தீவிர சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள்,  ஜெய்ப்பூர் அருகே ஜாபர் சாதிக்கை இன்று கைது செய்தனர்.ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டது தொடர்பாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு துணை இயக்குநர் ஞானேஷ்வர் சிங் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  திருவனந்தபுரம், ஐதராபாத், மும்பை, ஜெய்பூர், டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் ஜாபர் சாதிக் தலைமறைவாக இருந்ததாக தெரிவித்தார்.  ‘மங்கை’ என்ற திரைப்படம் போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தில் எடுக்கப்பட்டதாக கூறினார்.

மேலும்,  இந்த போதைப்பொருள் கடத்தலில் பல முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.  மும்பையில் போதைப்பொருள் கடத்தலில் ஜாபர் சாதிக் மீது ஏற்கெனவே சில புகார்கள் வந்ததாக கூறிய ஞானேஷ்வர் சிங்,  போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைக்கப்பெற்ற பணத்தை,  ரியல் எஸ்டேட் மற்றும் திரைப்படங்களில் ஜாபர் சாதிக் முதலீடு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.  அரசியல் கட்சிகளுக்கு நிதியுதவி அளித்தாரா என்பது தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாகவும்,  பாலிவுட் திரைத்துறையிலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் ஞானேஷ்வர் சிங் தெரிவித்தார்.இதையும் படியுங்கள் : 2 தொகுதிக்கு உடன்பட்டது ஏன்? - விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம்

இதனைத் தொடர்ந்து, ஜாபர் சாதிக் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு 7 நாட்கள் போலீஸ் காவல் விதித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் இன்னும் யார் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது, முக்கிய புள்ளிகள் யார், கடத்தலில் இருந்து கிடைத்த பணம் எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது தொடர்பான விசாரணையை இந்த 7 நாட்களில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

Tags :
Advertisement