For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகும் புயல் சின்னம் - இந்திய வானிலை மையம் அறிவிப்பு!

தென்கிழக்கு வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாக உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
10:30 AM Nov 23, 2025 IST | Web Editor
தென்கிழக்கு வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாக உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகும் புயல் சின்னம்   இந்திய வானிலை மையம் அறிவிப்பு
Advertisement

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, நேற்று (22-11-2025) காலை மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது.

Advertisement

இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற 24-ஆம் தேதி வாக்கில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதற்கடுத்த 48 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலும் வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இந்த நிலையில், தமிழகத்தின் 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாக உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்படி தெற்கு அந்தமான் கடலில் நேற்று (நவ.22) உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அதே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலை கொண்டுள்ளது என்றும், இது மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்து, அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement