For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"தேர்தலுக்கு பின்னர் பாஜகவிடமிருந்து புதுச்சேரி முதலமைச்சர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்" - முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி அறிவுறுத்தல்!

03:42 PM Mar 31, 2024 IST | Web Editor
 தேர்தலுக்கு பின்னர் பாஜகவிடமிருந்து புதுச்சேரி முதலமைச்சர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்    முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி அறிவுறுத்தல்
Advertisement

“சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி பாஜக ஆட்சி அமைக்க முயற்சி செய்யும் என்பதால் முதலமைச்சர் ரங்கசாமி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்” என புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Advertisement

புதுச்சேரியில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்
வைத்திலிங்கம் இன்று காமராஜர் நகர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில்
கூட்டணி கட்சி தலைவர்களுடன் திறந்த ஜீப்பில் பிரச்சாரம் மேற்கொண்டார். வைத்திலிங்கத்திற்கு ஆதரவாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பிரச்சாரம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்ததாவது..

”புதுச்சேரியில் சாதனை செய்ததாக முதலமைச்சர் ரங்கசாமி பொய் சொல்கிறார். பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் 7-கட்சிகள் மாறி உள்ள நிலையில் அடுத்து எந்த கட்சிக்கு போவார் என தெரியவில்லை. பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்திற்கு ரூ.100கோடி சொத்து உள்ளது என புதுச்சேரி மக்களுக்கு தெரியும்.

ஆனால் ரூ.10 கோடி சொத்து மதிப்பு இருப்பதாக தேர்தல் துறையிடம் பொய்யான தகவலை அவர் தெரிவித்துள்ளார்.  நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் டெபாசிட் இழந்து நடுத்தெருவில் நிற்பார். மக்களவைத் தேர்தல் முடிந்த பின்னர் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி பாஜக ஆட்சி அமைக்க முயற்சி செய்யும். ஆகையால் முதலமைச்சர் ரங்கசாமி மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்” நாரயணசாமி என அறிவுறுத்தினார்.

Tags :
Advertisement