Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு | போலீசாருக்கு கிடைத்த புது தகவல்! | சிக்குகிறாரா சம்போ செந்தில்?

11:03 AM Aug 24, 2024 IST | Web Editor
Advertisement

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் சம்போ செந்தில் குறித்து, நீண்ட நாட்களுக்கு பின் போலீசாருக்கு புதிதாக துப்பு கிடைத்திருக்கிறது.

Advertisement

பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை, கடந்த ஜூலை 5-ஆம் தேதி சிலர் சுற்றி வளைத்து வெட்டி கொலை செய்தனர். இந்த கொலை சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கிய நிலையில், இந்த வழக்கு தொடர்பாக காவல்நிலையத்தில் 8 பேர் சரண் அடைந்தனர். அவர்களில் திருவெங்கடம் என்ற குற்றவாளி தப்பிக்க முயற்சித்தாக கூறி போலீசார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.

இதில் திமுக, அதிமுக,பாஜக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட முக்கிய கட்சியின் நிர்வாகிகள் என மொத்தமாக 20க்கும் மேற்பட்டார் கைது செய்யப்பட்டனர். முன்விரோதம் மற்றும் பகை காரணமாக ஆம்ஸ்ட்ராங்கின் கொலைக்காக கூலிப்படைக்கு, பலரும் பணம் கொடுத்தது தெரியவந்தது. குறிப்பாக சிறையில் இருந்து இந்த கொலைக்கு பிரபல ரவுடி நாகேந்திரன் ஸ்கெட்ச் போட்டு கொடுத்ததாகவும், இதனை சம்போ செந்தில் செய்து முடித்தாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே சம்போ செந்திலை கைது செய்ய போலீசார் தனிப்படை அமைத்து தேடி வரும் நிலையில், தொடர்ந்து தலைமைறவாகவே இருந்து வருகிறார். இந்த நிலையில் சம்போ செந்திலின் கூட்டாளியான வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணாவை போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே மொட்டை கிருஷ்ணாவுடன் தொடர்பு கொண்டதாக பிரபல இயக்குநர் நெல்சனின் மனைவியிடமும் விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த திருவேங்கடம் என்ற ரவுடி துபாயில் இருந்து நேற்று (ஆக. 24) அதிகாலை சென்னை வந்த போது விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், முக்கிய குற்றவாளியான சம்போ செந்திலின் சமீபத்திய புகைப்படம் கூட கிடைக்காமல் போலீசார் திணறி வந்தனர். இதனை அடுத்து தீவிர விசாரணை நடைபெற்று வந்தது. இதன் தொடர்ச்சியாக சம்போ செந்திலின் முன்னாள் மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, 2020ஆம் ஆண்டு வரை இவரிடம் சம்போ செந்தில் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் முன்னாள் மனைவியிடம் இருந்து சம்போ செந்திலின் தற்போதைய உருவம் குறித்த புகைப்படத்தை போலீசார் பெற்றுள்ளனர்.

கடந்த பத்து வருடத்திற்கு முந்தைய புகைப்படத்தை வைத்து தனிப்படை போலீசார் சம்பவம் செந்திலை தேடி வந்த நிலையில் தற்போது போலீசாருக்கு புதிய உருவம் குறித்த புகைப்படம் சிக்கி உள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பிறகும் தொடர்ச்சியாக சம்போ செந்தில் விபி எண்ணை பயன்படுத்தி ஒரு நாளைக்கு ஐந்து பேரிடம் பேசி வருவது போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரவுடி சம்போ செந்தில் உத்தரவின் பேரில் அவரது கூட்டாளி புதூர் அப்பு நாட்டு வெடிகுண்டுகளை ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு சப்ளை செய்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து, நாட்டு வெடிகுண்டு கொடுக்க மூளையாக செயல்பட்ட ரவுடி புதூர் அப்புவை பிடிக்க ஐந்து தனி படைகள் அமைக்கப்பட்டு வெளி மாநிலங்களிலும் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

Tags :
ArmstrongArrestBahujan Samaj PartyBSPCrimeinvestigationnews7 tamilNews7 Tamil UpdatesPoliceRowdyRowdy Sambo SenthilThiringedam
Advertisement
Next Article