For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - மேலும் 3 பேர் கைது!

12:24 PM Jul 12, 2024 IST | Web Editor
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு   மேலும் 3 பேர் கைது
Advertisement

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சென்னையை அடுத்த திருநின்றவூரைச் சேர்ந்த மேலும் 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 5) இரவு பெரம்பூரில் அவரது வீட்டருகே படுகொலை செய்யப்பட்டார். இது தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக சென்னை காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ராத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். புதிய காவல் ஆணையராக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண் நியமிக்கப்பட்டார்.

இந்த வழக்கில் முதலில் 8 பேரும், பின்னர் 3 பேரும் கைது செய்யப்பட்டு இதுவரை 11 பேர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ் நரேஷ், சீனிவாசன் என மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட அருள் என்பவரின் செல்போன் எண்ணில் இருந்த எண்களை விசாரணை நடத்தியும், பெரம்பூர் பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றியும் விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த 3  பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags :
Advertisement