Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

காரைக்குடி அருகே பெண்ணிடம் ரூ.2 லட்சம் வழிப்பறி - 2 மணி நேரத்தில் இளைஞர்களை தட்டி துக்கிய போலீசார்!

காரைக்குடி அருகே நடந்து சென்ற பெண்ணிடம் ரூபாய் 2 லட்சம் வழிப்பறி செய்த இருவரை  2 மணி நேரத்தில் கல்லல் போலீசார் கைது செய்தனர். 
09:52 PM May 31, 2025 IST | Web Editor
காரைக்குடி அருகே நடந்து சென்ற பெண்ணிடம் ரூபாய் 2 லட்சம் வழிப்பறி செய்த இருவரை  2 மணி நேரத்தில் கல்லல் போலீசார் கைது செய்தனர். 
Advertisement

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கல்லல் கிராமம் இந்திரா நகர்
பகுதியை சேர்ந்தவர் பாக்கியம் (55). இவர் இந்தியன் வங்கியில் இருந்து 2
லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் எடுத்துக்கொண்டு அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு தனது வீட்டுக்கு சென்றுக்கொண்டிருந்தார். அப்போது மாஸ்க் அனிந்து இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் பாக்கியம் வைத்திருந்த பணப்பையை பறித்துச் சென்றனர்.

Advertisement

பாக்கியம் உடனடியாக இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்தார். இதன்பேரில் கல்லல் போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் குற்றவாளிகள் குறித்து தெரியவந்தது. குற்றவாளிகளின் இருப்பிடத்தை அறிந்த போலீசார் உடனடியாக விரைந்தனர்.

பின்னர் அதே கல்லல் பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன் (வயது 23), 22 வயதுடைய சுபஸ்ரீ (சுபஸ்ரீ ஆண்) ஆகிய இருவரையில் 2 மணி நேரத்தில் கைது செய்தனர். மேலும், பாக்கியத்திடம் இருந்து பறித்துச் சென்ற பணத்தை பறிமுதல் செய்தனர். போலீசார் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
ArrestCrimeKallalnews7 tamilNews7 Tamil UpdatesPolicesivaganga
Advertisement
Next Article