Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சீன ஆக்கிரமிப்பு குறித்து பிரதமர் மோடி மெளனம் காப்பது ஏன்? - காங்கிரஸ் கேள்வி!

09:58 PM Apr 02, 2024 IST | Web Editor
Advertisement

சீன ஆக்கிரமிப்பு குறித்து பிரதமர் மோடி மெளனம் காப்பது ஏன் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

சீனாவின் உள்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு இந்தியாவின் பகுதியாக உள்ள அருணாச்சலப் பிரதேசத்தை உரிமை கொண்டாடும் விதமாக, அப்பகுதியில் உள்ள 11 இடங்களுக்கு சீன, திபெத்திய, பின்யின் மொழிகளில் பெயர் சூட்டி வரைபடம் ஒன்றை வெளியிட்டிருந்தது. இந்த புதிய பகுதிகள் “திபெத்தின் தெற்குப் பகுதியான ஜங்னான்” பகுதியின் கீழ் வருவதாக சீனா அதில் குறிப்பிட்டிருந்தது.

இதில் அருணாசல பிரதேசத்தை சேர்ந்த இரண்டு நிலப்பகுதிகள், இரண்டு குடியிருப்பு பகுதிகள், ஐந்து மலை சிகரங்கள், இரண்டு ஆறுகள் போன்ற முக்கிய பகுதிகள் அடங்கும். இதேபோல இதற்கு முன் 2017-ம் ஆண்டில், சீனா இதே போன்று அருணாச்சலப் பிரதேசத்தின் ஆறு இடங்களின் பெயர்களை மாற்றி பட்டியலை வெளியிட்டதோடு, பின்னர் 2021-ம் ஆண்டிலும் 15 இடங்களின் புதிய பெயர் பட்டியலை வெளியிட்டது.

இந்நிலையில் பெயர் மாற்றும் படலத்தின் நான்காவது முறையாக ஏறத்தாழ 30 இடங்களில் பெயர்களை சீனா மாற்றி புதிய பெயர்களை கடந்த மார்ச் 30-ம் தேதி வெளியிட்டு இந்தியாவிற்கு அதிர்ச்சியை கொடுத்தது. அருணாசலப் பிரதேசத்தில் உள்ள 30 பகுதிகளுக்கு புதிய பெயர் சூட்டி சீன அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தை நீண்ட காலமாக சொந்தம் கொண்டாடி வரும் சீன அரசு, அதனை தெற்கு திபெத் எனக் குறிப்பிட்டு வருகிறது. மேலும், அருணாசலப் பிரதேசத்துக்கு சீனம், திபெத் மற்றும் ரோமானிய எழுத்துகளை பயன்படுத்தி ஜாங்னனில் எனப் பெயரிட்டு அழைத்து வருகிறது. அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 11 குடியிருப்பு கிராமங்கள், 12 மலைகள், 4 ஆறுகள், ஒரு ஏரி, ஒரு மலைப்பாதை மற்றும் ஒரு குறுகிய நிலப் பகுதிகளுக்கு திபெத் மற்றும் ரோமானிய எழுத்துகளை பயன்படுத்தி புதிய பெயர்களை சூட்டி ஹாங்காங் நாளிதழில் சீன அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் மேற்கு வங்கத்தில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, “சீனா உடனான இந்தியாவின் வணிகம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. ஆனால் மறுபுறம் சீனா இந்திய எல்லைகளை ஆக்கிரமிக்கிறது. லடாக் முதல் அருணாசலப் பிரதேசம் வரையில் எல்லைப் பகுதிகளை சீனா ஆக்கிரமித்துள்ளது. இவ்வளவு நடந்தும் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி அமைதி காக்கிறார். அது ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags :
Adhir Ranjan ChowdhuryArunachal PradeshBJPBorderchinaChinese GovtCongressINCIndianameNarendra modiNews7Tamilnews7TamilUpdatesPMKO India
Advertisement
Next Article