For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல் காந்தி - ரேபரேலியில் எம்.பி.யாக தொடர முடிவு!

07:39 PM Jun 17, 2024 IST | Web Editor
வயநாடு தொகுதி எம் பி  பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல் காந்தி   ரேபரேலியில் எம் பி யாக தொடர முடிவு
Advertisement

மக்களவைத் தேர்தலில் 2 தொகுதிகளில் வெற்றிபெற்ற ராகுல்காந்தி, வயநாடு தொகுதியை ராஜிநாமா செய்வதாகவும், ரேபரேலி தொகுதியில் எம்.பி.யாக தொடர்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவால் தனிப்பெரும்பான்மை பெற முடியாத நிலையில், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்தது. அதேநேரம் மறுபுறம் காங்கிரஸ் கட்சி இந்த முறை மொத்தம் 99 தொகுதிகளில் வென்றது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த முறை வென்ற கேரள மாநிலம் வயநாட்டு மற்றும் உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட்டார்.

இரண்டு தொகுதிகளிலும் ராகுல் காந்தி மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். விதிகளின்படி, ஒரு நபர் இரண்டு இடங்களில் தேர்தலில் போட்டியிடலாம். ஆனால் இரண்டிலும் வெற்றி பெற்றுவிட்டால் இரண்டில் எதாவது ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ஒருவரால் ஒரே நேரத்தில் இரு பதவியில் இருக்க முடியாது. ஒரு தொகுதியை மட்டுமே ஒரு நேரத்தில் பிரதிநிதித்துவப்படுத்த முடியும் என்பதே இதன் விதியாகும்.

இந்நிலையில், நாளையுடன் முடிவெடுப்பதற்கான இறுதி நாள் என்பதால் இன்று காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் அவரது இல்லத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி ராஜினாமா செய்வதாகவும், ரேபரேலியில் எம்பியாக தொடர்வதாகவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் வயநாட்டில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement