For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

எழுதி வைத்த வசனத்தை பேசி விட்டு செல்கிறார் விஜய்!

வருமான வரி சோதனையை சரிசெய்த புஸ்சி ஆனந்திற்கு பொதுச்செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது.
04:11 PM Jul 15, 2025 IST | Web Editor
வருமான வரி சோதனையை சரிசெய்த புஸ்சி ஆனந்திற்கு பொதுச்செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது.
எழுதி வைத்த வசனத்தை பேசி விட்டு செல்கிறார் விஜய்
Advertisement

Advertisement

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அப்பாவு,

சாத்தான்குளம் சம்பவத்தில் வழக்கு பதிவு செய்யவே அப்போதய அரசு தயங்கியது. ஆனால் திருப்புவனம் விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்தது யார் என்பதே ஆர்ப்பாட்டத்தில் பேசிய அந்த அரசியல் கட்சி தலைவருக்கு தெரியவில்லை.

விஜய் வீட்டில் வருமானவரித்துறை சோதனை செய்த போது பாண்டிச்சேரியை சேர்ந்த புஸ்சி ஆனந்த் அமித்ஷாவை நேரில் சென்று பேசி அதனை சரி செய்துவிட்டார். மேலும் வருமான வரி சோதனை நடத்திய அதிகாரி அருண்ராஜுக்கு பதவி வழங்கப்பட்டது.

மேடைக்கு வருகிறார், எழுதிக் கொடுத்த வசனத்தை வாசித்துவிட்டு செல்கிறார் விஜய். இதனைத்தொடர்ந்து வருமான வரி சோதனையை சரிசெய்த புஸ்சி ஆனந்திற்கு பொதுச்செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது.

மேலும் யார் சொல்லி இந்த போராட்டம் நடத்தினார் என்பது தெரியவில்லை. பாஜக மித்ஷா பின்னால் விஜய் இருப்பதாக பல்வேறு தகவல் பரவி வருகிறது. விஜயின் தாயார் சிறுபான்மையினர் பிரிவை சேர்ந்தவர் என்பதால் சிறுபான்மை வாக்குகளை பிரிப்பதற்காக அவரைத்தில் இறக்கி உள்ளதாக தோன்றுகிறது என தெரிவித்தார்.

Tags :
Advertisement