”இதுவரை சேராதவர்கள் முருகன் மாநாட்டில் இணைவார்கள்” - அண்ணாமலை நம்பிக்கை!
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையில் இன்று(ஜூன்.12) செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, “வருகின்ற காலத்தில் மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரனின் அறிவுறுத்தலின் படி மற்ற பகுதியில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறும் 2021, 2019 ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் எடுத்து படியுங்கள். ஊழல் இல்லாத உன்னத ஆட்சியை கொடுப்போம். நாங்கள் ஊழல் செய்திருக்கிறோம் என எதிர்கட்சிகள் கூட கடந்த 11 ஆண்டுகளில் குற்றம்சாட்டவில்லை. 1,45 லட்சம் கோடி கருப்பு பணத்தை மீட்டெடுத்திருக்கிறோம்.
70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை கொண்டு வந்துள்ளோம். தமிழ்நாடு அரசு அதை செயல்படுத்த தயக்கம் காட்டி வருகிறது. இந்தியா அளவில் 53 கோடி பேர் வங்கி கணக்கு தொடங்கி இருக்கிறார்கள். கோவைக்கு விரைவில் மெட்ரோ வர வேண்டும் என்பது ஆசை. அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு அதிகமாக ஸ்டிக்கர் ஒட்டுவது எங்கள் ஊரில் செல்போன் செய்கிறார்கள் என்பது. மத்திய அரசு தமிழ்நாடு அரசுக்கு 2021-2022ல் ரூ. 1,10,513 கோடிக்கு வழங்கி இருக்கிறோம்.
திமுக ஆட்சிக்கு கடந்த நான்கு ஆண்டுகளில், 512 தேர்தல் வாக்குறுதிகளில் 50-ஐ கூட நிறைவேற்றவில்லை. முதலமைச்சர் ஒவ்வொரு மேடையில் ஒவ்வொரு எண்ணிக்கை சொல்கிறார். வெறும் ஐம்பது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை இரண்டு முறை பெட்ரோல், டீசல் குறைத்திருக்கறோம். நாங்கள் ஏற்றவில்லை, மாநில அரசு குறைத்ததா? பாஜக அரசு ஆளும் மாநிலங்களில் விலையை குறைத்திருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் திமுக தேர்தல் வாக்குறுதியை கொடுத்துவிட்டும் கூட சிலிண்டர், பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை.
2014-ல் 56 சதவீதம் மக்களிடம் சிலிண்டர் இருந்தது. அதன் பிறகு 36 சதவீதம் மக்களுக்கு சிலிண்டர் வழங்கப்பட்டது. இலவச சிலிண்டர் கொடுத்திருக்கிறோம். அதை ஏன் யாரும் பார்ப்பதில்லை. கோவை விமான நிலைய விரிவாகத்திற்கு முழுமையாக நிலத்தை கொடுக்கவில்லை. அதனால் தான் மத்திய அமைச்சர் மாநில அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். நான் சிவனேன்னு என் வேலையை பார்த்துகொண்டிருக்கிறேன். 2026-ல் கூட்டணி அமைந்த பிறகு ஒவ்வொரு தலைவர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் தொடர்பாக பேசுவார்கள். நான் பாஜவின் தொண்டன். உயிருள்ளவரை இந்த கட்சிக்காக உழைப்பேன் தொண்டனாக எங்கு வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டுமோ அங்கே பேசுவதில்லை. பாஜக கட்சி முடிவுகளுக்கு தொண்டனாக கட்டுபடுகிறேன்.
கூட்டணி தொடர்பாக தலைவர்கள இருக்குகிறார்கள் அவர்கள் பார்த்து கொள்வார்கள். குழு அரசியல் என பார்க்கவில்லை. நான் பதவில் இருக்கும்போதே தலைவர் பதவியை வெங்காய பதிவி என கூறி இருக்கிறேன். சமூக வளைதளங்களில் நண்பர்கள் சண்டை போடாதீர்கள். அரசியல் மாற்றம் ஒரு நாள் தமிழ்நாட்டில் நிகழ்ந்தே தீரும் எனக்கு ஆதரவாளர்கள் என யாரும் இல்லை. அனைவரும் நண்பர்கள். தயவு செய்து என்னையும் ஒரு குழுவில் சேர்த்து விடாதீர்கள். பாமகவை பொறுத்தவரை அப்பா மகன் விரைவில் ஒரே நேர்கோட்டில் வருவார்கள் என நம்புகிறேன். என்னை பொறுத்தவரை இதுவரை சேராதவர்கள் முருகன் மாநாட்டில் இணைவார்கள்.
ஞானசேகரின் போனில் மற்றொரு வீடியோவும் இருந்தது. சிறப்பு புலனாய்வு பிரிவு அந்த பெண் யார் என்பது தொடர்பாகவும் அவரிடம் புகார் பெறவும் முயற்சி எடுக்கவில்லை. நீதிமன்றத்திற்கு கொடுக்கப்பட்ட குற்றபத்திரிக்கையின் அடிப்பையில் நீதிமன்றம் விசாரிக்கிறது. அமைச்சர் மா.சுப்ரமணியத்திற்கு ஏன் சம்மன் அனுப்பி விசாரிக்கில்லை. நிச்சயமாக இந்த வழக்கு சிபிஐக்கு போகவேண்டும். பாதிக்கப்பட்ட சகோதரியின் வழக்கறிஞரிடம் இந்த ஆதாரங்களை கொடுத்து அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான பணிகளில் ஈடுபடுவோம்” இவ்வாறு அவர் கூறினார்.