For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

புலி நடமாடுவதாக போலி வீடியோ வெளியிட்டவர் கைது!

10:09 AM Jan 12, 2024 IST | Web Editor
புலி நடமாடுவதாக போலி வீடியோ வெளியிட்டவர் கைது
Advertisement

புலி நடமாடுவதாக பரவிய சித்தரிக்கப்பட்ட வீடியோவை வெயியிட்ட ராஜ்குமார் என்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர். 

Advertisement

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாவில் அண்மைக் காலமாக
வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.  இதை கண்காணிக்க வனத்துறை சார்பில் வேட்டை தடுப்பு காவலர்கள்,  யானை விரட்டும் குழுவினர், வனத்துறையினர் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் அத்திகுன்னா குடியிருப்பு பகுதியில் புலி நடமாடுவதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது.   இந்த வீடியோ அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சம் ஏற்படுத்தியது.  இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர தயங்கினர்.  இதனை அறிந்த வனத்துறையினர்,  அந்த வீடியோவை  கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இதையும் படியுங்கள்: எண்ணூர் அம்மோனியா கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு – தமிழ்நாடு அரசு முடிவு

விசாரணையில்  அந்த வீடியோ அத்திகுன்னா பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரால் சித்தரிக்கப்பட்டது என்பது தெரிய வந்தது.  இதனைத் தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் ஓம்கரின் உத்தரவின்பேரில்,  ராஜ்குமாரை வனத்துறையினர் கைது செய்து தேவாலா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர் மக்களை அச்சுறுத்தும் வகையில் இது போன்ற தவறான செய்தியை வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வன அலுவலர் ஓம்கர் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement