”பீகார் SIR விவகாரத்தில் பாஜக அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும்” - எம்.பி. தங்க தமிழ்ச்செல்வன்!
தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
”பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள், பீகாரில் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது அது பற்றிய விவாதங்கள் வேண்டும் என்ற கோரிக்கையை ஏழுப்பி வருகிரோம். ஆனால் இதுவரைக்கும் மத்திய அரசு இது குறித்து காது கொடுத்து கூட கேட்கவில்லை.மேலும், இதற்கு மேல் நாடாளுமன்றம் நடக்குமா என்பது தெரியவில்லை.
நாளை காலை பாராளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணையம் வரை அனைத்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் நடை பயணமாக சென்று மனு அளிக்க உள்ளோம். நிச்சயமாக இந்த எஸ்.ஐ.ஆர் -க்கு ஒன்றிய பிஜேபி அரசு பதில் சொல்ல வேண்டும். நியாயம் நீதியை நிலை நாட்ட வேண்டிய நிலையில் இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளது” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் தமிழக மீனவர்கள் கைது தொடர்பான கேள்வி எழுப்பினர்.அதற்கு பதிலளித்த அவர், “இதுகுறித்து தமிழ்நாடு பாண்டிச்சேரி மொத்தம் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பேசியுள்ளோம். நிரந்தரமாக தீர்வுகள் காண வேண்டும் என்றால் இந்திய அளவில் ஒரு அதிகாரிகளை நியமித்து கண்காணித்து கைது நடவடிக்கைகளை குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு நிபந்தனை கொடுத்துள்ளோம்.
2026 தேர்தலில் மீண்டும் திமுக கூட்டணி தான் ஜெயிக்கும். முதல்வர் ஸ்டாலின்தான் மீண்டும் முதல்வர் ஆவார்.மத்திய கல்வி கொள்கை நாங்கள் ஏற்க தயாராக இல்லை இரு மொழி கொள்கைதான் தமிழ்நாட்டின் நிலைக்கும் அதுதான் எங்களுடைய நிலைப்பாடு” என்று தெரிவித்தார்.