For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பிரதமரின் மனதில் தமிழ்நாடு நிரந்தரமான இடத்தை பிடித்துள்ளது - ஜே.பி.நட்டா பேச்சு!

08:26 PM Feb 11, 2024 IST | Web Editor
பிரதமரின் மனதில் தமிழ்நாடு நிரந்தரமான இடத்தை பிடித்துள்ளது   ஜே பி நட்டா பேச்சு
Advertisement

பாஜக தலைவர்களின் இதயங்களில் தமிழ்நாடு எப்போதும் இருந்து வருவதாகவும், பிரதமரின் மனதில் எப்போதும் நிரந்திரமாக இடத்தை பிடித்திருப்பதாகவும் பாஜக தேசிய தலைவர் ஜேபி.நட்டா தெரிவித்துள்ளார்.

Advertisement

நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் ’என் மண் என் மக்கள்’ யாத்திரையை கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா ராமேஸ்வரத்தில் தொடங்கி வைத்தார். இந்த யாத்திரையின் முதற்கட்டம் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட யாத்திரையை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களாக மேற்கொண்டு வருகிறார்.

இந்த சூழலில் என் மண் என் மக்கள் இன்று சென்னையில் நிறைவு பெறுகிறது. இந்த நிறைவு விழாவில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்க சென்னை வந்தடைந்தார். அவரை அண்ணாமலை, வானதி சீனிவாசன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், ஏசி சண்முகம் உள்ளிட்டோர் வரவேற்றனர். இவரது இந்த பயணம் அரசியல் வட்டாரத்தில் முக்கியம் வாய்ந்தவையாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வள்ளலார் நகர், தங்க சாலையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் ஜெ.பி.நட்டா, அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல் முருகன், பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி மற்றும் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த விழா மேடையில் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜேபி.நட்டா கூறியதாவது:

“தமிழ்நாடு தேசிய வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்து வருகிறது. திருவள்ளுவர், சுப்பிரமணிய பாரதியார் ஆகியோரின் பங்களிப்பு, நம்மை மேலும் ஊக்கப்படுத்துகிறது. பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களின் இதயங்களில் தமிழ்நாடு எப்போதும் இருந்து வருகிறது. தமிழ்நாடு பிரதமரின் மனதில் எப்போதும் நிரந்திரமாக இடத்தை பிடித்திருக்கிறது.

தமிழ்நாட்டை சேர்ந்த விஞ்ஞானி எம்.எஸ்.சாமிநாதனுக்கு பாரத ரத்னா விருதை அறிவித்து கௌரவித்து இருக்கிறது மத்திய அரசு. தமிழகத்தின் கலாச்சாரம் மற்றும் பண்பாடு பெருமை கொள்ளும் விதத்தில் இருக்கிறது. செல்வாக்கு நிறைந்த தமிழ்நாடு, மிகவும் மோசமான ஆட்சி செய்பவர்களின் கையில் இருந்து வருகிறது. இங்கே மோசமான தலைவர்கள் இருக்கிற ஒரு ஆட்சி நடந்துகொண்டு வருகிறது. தமிழ்நாட்டை திசை திருப்பும் திமுகவின் தலைமையில் இந்த மாநிலம் இருந்து வருகிறது.

நான் வரும் போது கடைகளில் விளக்கு அணைக்கப்பட்டு இருக்கிறது. காவல்துறை குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் நீண்ட காலம் ஆகப் போவது இல்லை. பாஜக ஆட்சி வந்தால், திமுகவின் விளக்கு அணைக்கப்படும். நாம் என் மண், என் மக்கள் என சொல்லும் போது நமது மண்ணும், நமது மக்களும் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதே நோக்கமாக அமைகிறது.

பிரதமர் இந்த ஆட்சிக்கு வந்தது முதல் ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற நோக்கத்தில் இந்த மண்ணை வழிநடத்தி சென்று கொண்டு இருக்கிறார். இந்த மண்ணில் யாரெல்லாம் ஊழல் ஆட்சி செய்து வருகிறார்களோ, அவர்கள் எல்லாம் தூக்கி எறியப்படும் நாள் விரைவில் வந்துகொண்டு இருக்கிறது. இந்தியில் பேசுவது எனது கோரிக்கை. நாம் உலக பொருளாதாரத்தில் நம்மை ஆண்ட இங்கிலாந்தை பின் தள்ளிவிட்டு 5வது இடத்திற்கு வந்திருக்கிறோம்.

நாம் மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தால் இந்தியாவை பொருளாதாரத்தில் 3வது இடத்திற்கு கொண்டு வருவோம். பாரத நாடு ஆட்டோ மொபைல் துறையில் ஜப்பானை மிஞ்சும் அளவிற்கு சாதனை படைத்து வருகிறோம். இன்றைக்கு 95% மொபைல் உதிரி பாகங்கள் இந்தியாவில் தயார் ஆகின்றன. காஷ்மீர் சிறப்பு சட்டம் 370 மற்றும் ராம ஜென்ம பூமி அமைப்பு உள்ளிட்டவற்றில் நாம் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். எனவே 2024 தேர்தலில் மோடி ஆட்சி அமைக்க உங்கள் ஆதரவை தர வேண்டும்” இவ்வாறு தெரிவித்துள்ளார். 

Tags :
Advertisement