For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நாளை டெல்லி செல்கிறார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி!

09:56 PM Jun 25, 2024 IST | Web Editor
நாளை டெல்லி செல்கிறார் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி
Advertisement

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக மற்றும் பாஜக மனு அளித்துள்ள நிலையில் நாளை ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி செல்கிறார். 

Advertisement

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று சந்தித்து மனு அளித்தார். அதிமுக சார்பில் 63 எம்எல்ஏக்கள் மற்றும் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து இந்த மனுவை அளித்தனர். அந்த மனுவில் கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்கள் நடமாட்டத்தை தடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு முன்னதாக இதே கோரிக்கையை வலியுறுத்தி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்பட அக்கட்சியின் மூத்த தலைவர்கள் ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து மனு அளித்திருந்தனர்.

இந்நிலையில் நாளை ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாளை காலை டெல்லி புறப்படும் அவர் உள்துறை அதிகாரிகளை சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
Advertisement