For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

காணாமல் போன சகோதரிகள் - கொலையா என விசாரித்த போலீஸ் ... கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்!

03:14 PM May 02, 2024 IST | Web Editor
காணாமல் போன சகோதரிகள்   கொலையா என விசாரித்த போலீஸ்     கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்
Advertisement

டெல்லியில் கடந்த ஆண்டு 2 சகோதரிகள் காணாமல் போன விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. 

Advertisement

உத்தரப்பிரதேச மாநிலம்,  கோரக்பூரை சேர்ந்தவர் அஜய் பிரஜாபதி.  அவர் தனது குடும்பத்தினருடன் தற்போது டெல்லியில் வசித்து வருகிறார்.  அவரின் சகோதரிகளான சீதா (20) மற்றும் கீதா (21) கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திடீரென காணாமல் போயினர்.  இதனால் அஜய் தனது சகோதரிகளை பல இடங்களில் தேடினார்.

தொடர்ந்து அவர் தனது சொந்த ஊரான கோரக்பூருக்கும் சென்று தேடியுள்ளார்.  அப்பொழுது அதே ஊரைச் சேர்ந்த ஜெய்நாத் என்பவருடன்,  அஜய்க்கு பிரச்னை ஏற்பட்டது.  இதில் ஜெய்நாத் `உனது சகோதரிக்கு ஏற்பட்ட நிலை தான் உனக்கும் ஏற்படும்' என்று கூறி அஜயிடன் கூறியுள்ளார்.  இதனால் தனது சகோதரிகள் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கருதி,  இது குறித்து போலீஸில் புகார் செய்தார்.  ஆனால் போதிய ஆதாரம் இல்லை என்று கூறி போலீஸார் வழக்கு பதிவு செய்ய மறுத்தனர்.

இதனைத் தொடர்ந்து அஜய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  இது குறித்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.  உடனே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். 4 மாதங்கள் நடத்திய விசாரணையில் 2 சகோதரிகளும் உயிருடன் இருப்பதும்,  அவர்கள் இரண்டு பேரும் தங்களது காதலர்களுடன் ஊரை விட்டு வெளியேறியிருப்பதும் தெரிய வந்தது.

தாங்கள் காணாமல் போனதால் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்ததும் இரு சகோதரிகளும் கைக்குழந்தையுடன் பெல்காட்டில் உள்ள காவல்நிலையத்தில் ஆஜரானார்கள்.  இதில் சீதா ஹரியானாவை சேர்ந்த விஜேந்தர் என்பவரை திருமணம் செய்துள்ளார்.  இவர்களுக்கு 5 மாத பெண் குழந்தை உள்ளது.  கீதா உத்தரகாண்டைச் சேர்ந்த  சுரேஷ் ராம் என்பவரை திருமணம் செய்துள்ளார்.  இவர்களுக்கு 6 மாத பெண் குழந்தை உள்ளது.

Tags :
Advertisement