For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கரூரில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு!

கரூரில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு மத்திய அரசின் சார்பில் தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
12:28 PM Sep 28, 2025 IST | Web Editor
கரூரில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு மத்திய அரசின் சார்பில் தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கரூரில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ 2 லட்சம் நிவாரணம்   பிரதமர் மோடி அறிவிப்பு
Advertisement

கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் நேற்று இரவு தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டம் நடைபெற்றது. விஜய் பேசி முடித்து புறப்பட்ட பின்னர், கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement

இதனை தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சமும், தவெக சார்பில் தலா ரூ.20 லட்சமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கரூரில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு மத்திய அரசின் சார்பில் தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் வழங்கப்படும்" என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement