For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“ராகுல் காந்தி ராஜினாமா செய்ய வேண்டும்” - பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா!

ராகுல் காந்தி மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா தெரிவித்துள்ளார்.
06:23 PM Aug 09, 2025 IST | Web Editor
ராகுல் காந்தி மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா தெரிவித்துள்ளார்.
“ராகுல் காந்தி ராஜினாமா செய்ய வேண்டும்”   பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா
Advertisement

Advertisement

தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை என்றால், ராகுல் காந்தி தனது மக்களவை உறுப்பினர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அண்மையில் நடந்த தேர்தல்களில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம் சாட்டி வருகிறார். இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த கௌரவ் பாட்டியா, "இந்திய ஜனநாயகத்தின் அச்சாணியாகத் திகழும் தேர்தல் ஆணையத்தின் மீது ராகுல் காந்திக்கு நம்பிக்கை இல்லை என்றால், அவர் தனது பதவியை தார்மீக ரீதியாக ராஜினாமா செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

ராகுல் காந்தி தொடர்ந்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பரப்பி வருவதாகவும், இதனால் தேர்தல் ஆணையத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்க முயல்வதாகவும் கௌரவ் பாட்டியா குற்றம் சாட்டினார்.

மேலும், தேர்தல் ஆணையம் ராகுல் காந்தியிடம் எழுத்துப்பூர்வமான ஆவணம் கோரிய நிலையில், அவர் அதனைச் சமர்ப்பிக்காமல் தவிர்ப்பது, தேர்தல் ஆணையத்தை மட்டுமல்லாமல், இந்திய அரசியல் சாசனத்தையும் அவமதிப்பதாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

பாஜகவின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு காங்கிரஸ் கட்சி இன்னும் பதிலளிக்கவில்லை. ஆனால், தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்படவில்லை என்றும், ஆளும் கட்சிக்கு சாதகமாகச் செயல்படுகிறது என்றும் ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இதனால், பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே அரசியல் மோதல் மேலும் வலுத்துள்ளது.

Tags :
Advertisement