For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அரவிந்த் கெஜ்ரிவால் கைது எதிரொலி: டெல்லியில் கண்டன பொதுக்கூட்டம் - 'இந்தியா' கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு!

03:07 PM Mar 31, 2024 IST | Web Editor
அரவிந்த் கெஜ்ரிவால் கைது எதிரொலி  டெல்லியில் கண்டன பொதுக்கூட்டம்    இந்தியா  கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு
Advertisement

அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், காங்கிரஸ் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டதை எதிர்க்கும் நோக்கிலும், இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் இன்று (மார்ச் 31) மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது. 

Advertisement

எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள ‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவரான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்திருப்பது தேசிய அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீதான கைது நடவடிக்கைக்கு பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது. இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சியினரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்குகள் வருமான வரித்துறையின் அதிரடி நடவடிக்கைகளால் முடங்கியுள்ளன. மேலும் பல்வேறு எதிர்க்கட்சிகள், மக்களவைத் தேர்தல் நெருக்கத்தில் மத்திய அரசின் விசாரணை அமைப்புகளால் புதிய நெருக்கடிகளை சந்திப்பதாக குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் மற்றும் பேரணி இன்று (மார்ச் 31) டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் இந்தியா கூட்டணி தலைவர்கள் இந்த பேரணியில் பங்கேற்றனர்.

இதில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, திமுக எம்.பி. திருச்சி சிவா, விசிக தலைவர் திருமாவளவன், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ராஷ்டிரிய ஜனதாதளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி மற்றும் பிற இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.

Tags :
Advertisement