For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவுடி நாகேந்திரன் கைது!

10:32 AM Aug 10, 2024 IST | Web Editor
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவுடி நாகேந்திரன் கைது
Advertisement

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், வேலூர் சிறையில் உள்ள ரவுடி நாகேந்திரனை போலீசார் கைது செய்தனர். 

Advertisement

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த மாதம் 5ஆம் தேதி சென்னை பெரம்பூரில் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் காவல்நிலையத்தில் ஆஜரான கூலிப்படையினர் ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழி வாங்கவே இவரை கொலை செய்ததாக தெரிவித்தனர். ஆனால் போலீசார் தொடர் விசாரணையில் இந்த வழக்கில் மேலும் பல முக்கிய திருப்பங்கள் ஏற்பட்டன.

ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் தொடர்ந்து தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே ரவுடி நாகேந்திரன் மகனும் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகியுமான அஸ்வத்தாமனை அண்மையில் போலீசார் கைது செய்தனர்.  மேலும் பல ரவுடிகள் இந்த கொலையின் பின்னணியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த சூழலில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வேலுர் சிறையில் உள்ள ரவுடி நாகேந்திரனை போலீசார் கைது செய்தனர்.  இந்த கொலை வழக்கில் 23 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவ செந்தில் கைது எப்போது?

மேலும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடி சம்பவம் செந்தில் மற்றும் சீசிங் ராஜா ஆகியோரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.  தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே இருக்கும் சம்பவம் செந்தில், தனது வழக்கறிஞர், நண்பர்கள் உடன் இன்டர்நெட் கால் போன்ற ஆன்லைன் செயலிகள் மூலமாக தொடர்பு கொண்டு கொலை உள்ளிட்ட சதி செயல்களுக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுப்பார் எனக் கூறப்படுகிறது.

தொடர்ந்து சம்பவ செந்திலின் கூட்டாளியான ஈஷாவிடம், 10 இன்டர்நெட் கால் எண்களை போலீசார் பெற்றுள்ளனர். கடந்த ஓர் ஆண்டில் இந்த எண்களில் இருந்து தான் சம்பவம் செந்தில், ஈஷா உள்ளிட்ட தனது சகாக்களிடம் தொடர்பு கொண்டது தெரியவந்துள்ளது. சென்னை சைபர் கிரைம் போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டும் சம்பவம் செந்திலை நெருங்க முடியாத நிலையில், தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் டெல்லியில் செயல்படும் தேசிய தகவல் மையத்தின் உதவியை சென்னை போலீசார் நாடியுள்ளனர்.

தேசிய தகவல் மையத்தின் உதவியுடன் சம்பவ செந்திலின் இருப்பிடத்தை கண்டறிந்து கைது செய்வதற்கான வேலையில் சென்னை போலீசார் மும்முரமாக இறங்கி உள்ளனர். மத்திய புலனாய்வு அமைப்புகளுக்கு பல்வேறு வகையில் தேசிய தகவல் மையம் உதவிகரமாக உள்ளது. குறிப்பாக பயங்கரவாதிகளின் தகவல் தொடர்புகளை நவீன தொழில்நுட்ப கருவிகள் மூலம் கண்டறிந்து அவர்கள் இருப்பிடத்தை புலனாய்வு அமைப்புகளுக்கு தெரிவிக்க, தேசிய தகவல் மையம் உதவி செய்கிறது.

Tags :
Advertisement