For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மூதாட்டியிடம் நூதன திருட்டு - இளைஞர் கைது!

05:17 PM Feb 13, 2024 IST | Web Editor
மூதாட்டியிடம் நூதன திருட்டு   இளைஞர் கைது
Advertisement
மூதாட்டியிடம் ஆசிர்வாதம் செய்யுமாறு கூறி தனியாக அழைத்து சென்று கவனத்தை
திசை திருப்பி நகைகளை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றவரை போலீசார் கைது
செய்தனர்.

சென்னை ராயப்பேட்டை சர்தார்ஜங் கார்டன் பகுதியை சேர்ந்தவர் மூதாட்டி சூர்யா(68).  இவர் நேற்று (பிப்.12) தனது வீட்டருகே உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தான் வீடு
வீடாக பால் போடும் வேலை செய்து வருவதாக அறிமுகம் செய்து கொண்டதுடன், மூதாட்டியின் காலில் விழுந்து தன்னை ஆசிர்வாதம் செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement

இதனைத் தொடர்ந்து மூதாட்டி சூர்யா அவருக்கு ஆசிர்வாதம் செய்துள்ளார்.  பின்னர் அந்த நபர் பேச்சு கொடுத்து மூதாட்டியை பீட்டர் சாலை வரை‌ அழைத்துச் சென்றுள்ளார். அங்குள்ள ஒரு கடை முன்பு வைத்து, அந்த நபர் மூதாட்டி அணிந்திருந்த தங்க செயின், கம்பல் என 7 சவரன் நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார்.

உடனே பாதிக்கப்பட்ட மூதாட்டி இது குறித்து அண்ணா சாலை காவல்
நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து
சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.  இதனைத் தொடர்ந்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட மேடவாக்கம் பகுதியை சேர்ந்த திருமலை (45) என்பவரை கைது செய்தனர்.  அவரிடம் இருந்து 6 சவரன் நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் கைது செய்யப்பட்ட திருமலை மீது ஏற்கனவே 12-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது.  மேலும் சென்னை புதுப்பேட்டை யில் 65 வயது மூதாட்டி ரமணியிடம் 2 சவரன் நகை மற்றும் 1500 ரூபாய் பணம் பறித்து சென்றதும், திருமலை தான் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Tags :
Advertisement