மக்களவைத் தேர்தல் முடிவுக்கு பின் ராகுல் காந்தி, கார்கேவை சந்தித்தாரா நிதிஷ்குமார்?
This news fact checked by Newsmeter
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கேவுடன் இருப்பதாக வைரலாகிவரும் புகைப்படம் பழையது என்றும், தேர்தல் முடிவுகளுக்கும் இந்த புகைப்படங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, புதிய அரசு அமைவதை நாடு முழுவதும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், கூட்டணி பேச்சுவார்த்தைகள் குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டணிக் கட்சிகளான ஜேடியு, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் ஆதரவளித்தால் மட்டுமே தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்க முடியும்.
இதற்கிடையில், ஜேடியூ தலைவர் நிதிஷ் குமார் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகிய இருவரும் இந்திய கூட்டணியில் சேருவதா அல்லது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிப்பதா என்பது குறித்த அவர்களின் முடிவு முக்கியமானது என்பதால் அவர்கள் பெரியஅழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
"நிதிஷ் குமார் டெல்லிக்கு வந்து இந்தியா கூட்டணியின் தலைவர்களைச் சந்தித்தார். சந்திரபாபு நாயுடு இந்தியா கூட்டணியின் உயர்மட்டத் தலைவர்களிடம் பேசினார். மக்கள் தலைவர் ராகுல் காந்தி மோடி மீண்டும் பிரதமராக வரமாட்டார் என தெரிவித்துள்ளார்" என்ற தலைப்பில் ஒரு பேஸ்புக் பயனர் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். மேலும் இந்தியா கூட்டணி தலைவர்களை சந்திக்க பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் டெல்லி சென்றுள்ளதாக அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
இந்த பதிவில் மூன்று புகைப்படங்கள் இணைக்கப்பட்டிருந்தன. அதில், இரண்டு புகைப்படங்கள் ஒரே சந்திப்பில் நிதிஷ் குமார் இந்தியா கூட்டணி தலைவர்களுடன் இருப்பதைக் காட்டுகிறது. மூன்றாவது புகைப்படத்தில் NDTC செய்தியின்அட்டைப் படத்தில் நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு இருந்தனர். அந்த படத்தின் தலைப்பில், "கிங்மேக்கர்: NDA அல்லது இந்திய கூட்டணி. யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?” என பதிவிடப்பட்டிருந்தது.
உண்மை சரிபார்ப்பு:
இந்த பதிவு குறித்த உண்மை சரிபார்ப்பில், வைரலாகும் புகைப்படங்கள் சமீபத்தியவை அல்ல எனவும், 2023-ம் ஆண்டில் எடுக்கப்பட்டவை என்பதால் அந்தக் கூற்று தவறானது எனவும் கண்டறியப்பட்டது.
முதல் புகைப்படத்தின் தலைகீழ் படத் தேடல், நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் ரோட் டு 2024 என்ற கட்டுரை கண்டறியப்பட்டது. ஏப்ரல் 13. 2023 அன்று வெளியிடப்பட்ட இந்த செய்தியில், 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பாஜகவுக்கு எதிரான கூட்டணியை உருவாக்குவதற்கான வியூகம் குறித்து நிதிஷ் குமார் ஆம் ஆத்மி தலைவர்களுடன் விவாதிக்க இந்த சந்திப்பு நடந்ததாக இந்த செய்தி கூறுகிறது. எதிர்கட்சிகளின் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்காக இந்த சந்திப்பு வரலாற்று சிறப்புமிக்கது என்று கார்கே மற்றும் ராகுல் காந்தி இருவரையும் மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
முடிவு:
எனவே, வைரலாகும் இந்த புகைப்படங்கள் ஏறக்குறைய ஒரு ஆண்டு பழமையானது மற்றும் சமீபத்திய தேர்தல் முடிவுகளுடன் தொடர்பில்லாதது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Note : This story was originally published by Newsmeter and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.