அமித் ஷா பங்கேற்கும் நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு - நயினார் நாகேந்திரன் தகவல்!
கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்கள் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “பெங்களூரில் நெரிசலில் சிக்கி இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் கர்நாடக மாநிலத்தின் ஆளும் கட்சியினர் சரியான ஏற்பாடு செய்யாததே காரணம். இது போன்ற நிகழ்வுகளை பாதுகாப்போடு நடத்த வேண்டும். மகாராஷ்ராவில் அதைவிட அதிகமாக கூட்டம் கூடிய போதும் கூட சிறு பிரச்சனை ஏற்படவில்லை. தேனி விவசாய தீக்குளிப்பு சம்பவம் தொடர்பாக உரிய விசாரணையும் இழப்பீடும் வழங்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து தவெக தலைவர் விஜய் நடத்திய கல்வி விருது விழா குறித்து, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேசியது தொடர்பாக கேள்வி எழுப்பபட்டது. அதற்கு அவர், “யாராக இருந்தாலும் யாரையும் தரக்குறைவாக பேச கூடாது” என்றார். தொடர்ந்து பேசுகையில், “ஈரோட்டில் 19 கொலையில்ன் பிடிபட்டவர்கள் வாக்குமூலம் சொல்லியிருக்கிறார்கள் அப்போது அந்த கொலைக்கெல்லாம் கைது செய்யப்பட்டவர்கள் நிரபராதிகளா? காவல்துறை நிர்வாகம் முறையாக விசாரணை மேற்கொள்ளவில்லை” என்று கூறினார்.
எந்த ஷாவும் காலூன்ற முடியாது என மதுரையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியது தொடர்பான கேள்விக்கு “வரும் 8 ஆம் தேதி மதுரையில்தான் அமித்ஷா காலூன்ற போகிறார்” என்றார். விஜய்க்கு அழைப்பு விடுப்பீர்களா என்ற கேள்விக்கு “ஏற்கெனவே அழைப்பு விடுத்துள்ளோம்” என்றார். தொடர்ந்து பேசும்போது, “பாமக விவகாரம் தனிப்பட்ட பிரச்சனை அதில் எல்லாரும் சமாதானமாக செல்வது நல்லதுதான், முருகபக்தர்கள் மாநாட்டில் நாங்கள் எல்லாம் குவியும் போது அது செண்ட் ஜார்ஜ் கோட்டையில் எதிரொலிக்கும்”
இவ்வாறு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.