For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"தற்காலிக பின்னடைவுகளிலிருந்து மீண்டு வருவோம்" - காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

05:37 PM Dec 03, 2023 IST | Web Editor
 தற்காலிக பின்னடைவுகளிலிருந்து மீண்டு வருவோம்    காங்  தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
Advertisement

3 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் ஏமாற்றமளித்தாலும் தற்காலிக பின்னடைவுகளிலிருந்து மீண்டு வருவோம் என காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

Advertisement

4 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் மூன்று மாநிலங்களில் பாஜக வெற்றி முகத்தோடு முன்னேறி வருகிறது. தெலங்கானாவில் காங்கிரஸ் வெற்றியை பதிவு செய்தாலும் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலத் தேர்தல்களில் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்து வருகிறது.

காங்கிரஸ் வரலாற்றில் 1980க்குப் பிறகு, இந்தி பெல்ட்டின் எந்த மாநிலத்திலும் சொந்த ஆட்சி இல்லாதது இதுவே முதல் முறையாகும். காங்கிரஸ் வட்டாரங்களின்படி,  கட்சி தோல்வியை மறுபரிசீலனை செய்து லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் என கூறப்படுகிறது. எனினும், காங்கிரஸின் தோல்வி குறித்து பெரிய தலைவர்கள் மவுனம் காத்து வந்தனர்.

இந்நிலையில் தேசிய காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சட்டப்பேரவை தேர்தல் குறித்து தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

"தெலங்கானாவில் ஆட்சியமைக்க வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி.  சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் வாக்காளர்களுக்கு நன்றிகள்.

இந்த 3 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் எங்களுக்கு ஏமாற்றமளிக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மீண்டும் இந்த 3 மாநிலங்களிலும் காங்கிரஸ் புத்துணர்வுடன் கட்டமைக்கப்படும் என்பதை உறுதிப்படுத்துகிறோம்.

இந்த 4 மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி உத்வேகத்துடன் பிரசாரத்தில் ஈடுபட்டது. எங்கள் லட்சக்கணக்கான தொண்டர்களின் முயற்சிகளை நான் அங்கீகரித்து பாராட்டுகிறேன்.

தற்காலிக பின்னடைவுகளிலிருந்து மீண்டு வருவோம். இந்திய கூட்டணி கட்சிகளுடன் இணைந்து வரும் மக்களவைத் தேர்தலுக்கு நம்மை முழுமையாகத் தயார்படுத்துவோம்".

இவ்வாறு காங்.தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது X பதிவில் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement