For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“பிரஜ்வால் ரேவண்ணா ஒரு ஆபாச மனிதர் என்று தெரிந்து கொண்டு அவருக்கு பாஜக கூட்டணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது!” - எம்.ஹசீனா சையத் குற்றச்சாட்டு

09:40 PM May 02, 2024 IST | Web Editor
“பிரஜ்வால் ரேவண்ணா ஒரு ஆபாச மனிதர் என்று தெரிந்து கொண்டு அவருக்கு பாஜக கூட்டணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது ”   எம் ஹசீனா சையத் குற்றச்சாட்டு
Advertisement

பிரஜ்வால் ரேவண்ணா ஒரு ஆபாச மனிதர் என்று தெரிந்து கொண்டு அவருக்கு பாஜக கூட்டணியில் தேர்தலில் வேட்பாளராக வாய்ப்பு கொடுக்கிறார்கள் என தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவர் எம். ஹசீனா சையத் குற்றம் சாட்டியுள்ளார். 

Advertisement

கர்நாடக மாநிலம் ஹாசன் மக்களவைத் தொகுதி பாஜக கூட்டணி கட்சியை சேர்ந்த
மதச்சார்பற்ற ஜனதா தள வேட்பாளர் பிரஜ்வால் ரேவண்ணா சம்பந்தப்பட்ட பாலியல்
வீடியோ வெளியானது குறித்து தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவர் எம். ஹசீனா
சையத் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவர் எம். ஹசீனா சையத் பேசியதாவது:

பிரஜ்வால் ரேவண்ணா ஒரு ஆபாச மனிதர். நாம் நிறைய ஊழல் பற்றி கேள்விப்பட்டிருப்போம், நாட்டிலேயே மிகப்பெரிய பாலியல் ஊழல் செய்தவர்
பிரஜ்வால் ரேவண்ணா தான். இவர் மட்டும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடவில்லை,  அவருடைய தந்தை கூட தான் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.

போதை பொருளாக தான் பெண்களை பார்க்கிறார்கள் பாஜக-வினர். வேட்பாளர் பிரஜ்வால் ரேவண்ணா ஒரு ஆபாச மனிதர் என்று தெரிந்து கொண்டு அவருக்கு தேர்தலில் வேட்பாளராக வாய்ப்பு கொடுக்கிறார்கள். முன்னாள் முதல்வர் தேவகவுடாவின் பேரன், முன்னாள் மந்திரி ரேவண்ணாவின் மகன், முன்னாள் கர்நாடகாவின் முதல்வர் குமாரசாமி அவருக்கு சித்தப்பா முறை , இதுதான் பாஜகவின் குடும்பம்

பெண்களின் விரோத குடும்பம் தான் பாஜக. பாஜகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ப்ரீதம் கௌடா என்பவர் பிப்ரவரி, மார்ச்சிலேயே பிரஜ்வால் ரேவண்ணா குறித்து அமித்ஷாவிடம் புகார் கொடுத்திருந்தார். பாஜக அரசு ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன் கொடுமைகளுக்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றம் நாடி தான் உண்மை தன்மை அறிந்து கொள்கின்றனர்.

சொந்தக் கட்சியை சார்ந்தவர்கள் பாஜகவிடம் இவரை பற்றி தெரிவித்திருக்கிறார்கள்.
இவற்றை எல்லாம் மீறி மகிலா சம்மான், நாரி சக்தி, பேட்டி பச்சாவ்,  பேட்டி
படாவ் என்றெல்லாம் கூறுகிறது பாஜக. கிட்டத்தட்ட 2906 காணொளிகள் வீடியோக்களை வைத்திருக்கிறார் பிரஜ்வால் ரேவண்ணா. இந்த விவகாரம் வெளியே தெரிந்தவுடன் கர்நாடக மாநில மகளிர் ஆணையம் உடனடியாக இந்த வழக்கை கையில் எடுக்கிறது

முதல்வருக்கு தெரியப்படுத்தியது, புகார் கொடுத்த ஒரு மணி நேரத்தில் நாட்டை
விட்டு வெளியேறி ஜெர்மனிக்கு செல்கிறார் பிரஜ்வால் ரேவண்ணா.விமான நிலையங்கள் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது. விமான நிலையங்கள் பாஜக கட்டுப்பாட்டில் உள்ளதால் தப்பிக்க சுலபமாக உள்ளது.

தாளி என்பது எங்களுக்கெல்லாம், ஆபரணங்கள் போல் பேசுகிறீர்கள் , நாங்கள் மஞ்சள்
கிழங்கில் தாலி போட்டு கொண்டாலும் கூட எங்களுக்கு உயிர் போன்றது தான். பிரஜ்வால் ரேவண்ணா வெளிநாட்டில் இருக்கிறார்.  இந்த பாஜக அரசு எப்பொழுது தண்டனை கொடுக்க போகிறது. அகில இந்திய மகளிர் காங்கிரஸ் சார்பாகவும், தமிழக மகளிர் காங்கிரஸ் சார்பாகவும் பிரஜ்வால் ரேவண்ணாவை சிறையில் அடைக்கும் வரை போராடுவோம், தண்டனை பெற்றுத் தரும் வரை ஓய மாட்டோம்.

பில்கிஸ் பானு வழக்கில் சிறையில் இருந்து வெளியான குற்றவாளிகளுக்கு லட்டு
ஊட்டி வரவேற்றார்கள், பிரஜ்வல் ரேவண்ணாவையும் அப்படி வரவேற்பார்களா என்று
தெரியவில்லை. அப்படி வரவேற்றால் அவர்களின் உருவ பொம்மை நாங்கள் எரிப்போம் என்று எச்சரித்தார்.

பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகளுக்கு லட்டு ஊட்டி வரவேற்றார்கள்,பிரஜ்வல் ரேவண்ணாவையும் அப்படி வரவேற்பர்களா என்று தெரியவில்லை. இவ்வாறு தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவர் எம். ஹசீனா சையத் கூறியுள்ளார்.

Tags :
Advertisement