For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஜே.பி.நட்டா திருச்சியில் வாகனப்பேரணி நடத்த காவல் துறை அனுமதி மறுப்பு!

03:55 PM Apr 06, 2024 IST | Web Editor
ஜே பி நட்டா திருச்சியில் வாகனப்பேரணி நடத்த காவல் துறை அனுமதி மறுப்பு
Advertisement

திருச்சியில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா வாகன பேரணி நடத்த காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

Advertisement

2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பாஜக தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றது.  இந்த நிலையில், தமிழ்நாட்டில் பரப்புரை மேற்கொள்வதற்காக இன்றிரவு நட்டா திருச்சி வரவுள்ளார்.

திருச்சி காந்தி மார்க்கெட் முதல் மலைக்கோட்டை வரை வாகன பேரணி நடத்த பாஜக தரப்பில் அனுமதி கோரப்பட்டிருந்தது.  அதற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

பேரணி நடத்த அனுமதி கேட்கப்பட்ட பகுதி போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி. பொதுமக்கள் அதிகமான பயன்படுத்தக்கூடிய பகுதி என்பதாலும்,  சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா இடம்பெறுவதாலும் வாகனப் பேரணிக்கு அனுமதி தர காவல்துறை மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

Tags :
Advertisement