For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"போதைபொருள் நெட்வொர்க்" குறித்து ஜாபர் சாதிக்கிடம் கிடுக்கிப்பிடி விசாரணை!

01:27 PM Mar 11, 2024 IST | Web Editor
 போதைபொருள் நெட்வொர்க்  குறித்து ஜாபர் சாதிக்கிடம் கிடுக்கிப்பிடி விசாரணை
Advertisement
வெளிநாட்டு போதைப்பொருள் கடத்தல் கும்பலுடனான "நெட்வொர்க்" குறித்து ஜாபர் சாதிக்கிடம் மத்திய போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரூ.2000 கோடிக்கு போதைப்பொருள் வெளிநாட்டுக்கு கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஜாபர் சாதிக் நேற்று முந்தினம் கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
போதைப் பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பெரும் அளவு பணத்தை தமிழ் சினிமாவில் ஜாபர் சாதிக் முதலீடு செய்திருக்கிறார் என்றும் மங்கை என்ற படம் போதைப் பொருள் கடத்தியதன் மூலம் கிடைத்த பணத்தில் தான் தயாரித்ததாக அவர் கூறி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.  மேலும் தமிழ் திரையுலக பிரபலங்கள் சிலர் ஜாபர் சாதிக் உடன் இணைந்து படத் தயாரிப்பில் ஈடுபட்டு இருப்பதாகவும் தமிழகத்தில் மட்டுமின்றி மும்பையிலும் அவருக்கு சினிமா நெட்வொர்க் இருப்பதாகவும் இது குறித்து விசாரித்து வருகிறோம் என்றும் மத்திய போதைப்பொருள் தடுப்பு துறை தெரிவித்துள்ளது.
இதுவரை 3500 கிலோ போதை பொருள் ஜாபர் சாதிக் கடத்தி இருப்பதாகவும்  இந்தியாவிலிருந்து மலேசியா ஆஸ்திரேலியா நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு கடத்தி இருப்பதாகவும் போதைப்பொருள் தடுப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில்,  இந்த போதைப்பொருள் நெட்வொர்க் உருவாகியது எப்படி? என்பது குறித்து ஜாபர் சாதிக்கிடம் மத்திய போதைப்பொருள் அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணையை நடத்தி வருகின்றனர்.  வெளிநாடுகளில் உள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு குறித்து பல்வேறு கோணங்களில் ஜாபர் சாதிக்கிடம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்து வருகின்றனர் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள்.
Advertisement
Tags :
Advertisement