For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ராகுல் காந்தியின் Selfie-ல் இருப்பது இயேசு கிறிஸ்துவின் புகைப்படமா? - உண்மை என்ன?

01:04 PM May 26, 2024 IST | Web Editor
ராகுல் காந்தியின் selfie ல் இருப்பது இயேசு கிறிஸ்துவின் புகைப்படமா    உண்மை என்ன
Advertisement

This News Fact Checked by ‘NewsMobile

Advertisement

ராகுல் காந்தி, சோனியா காந்தியின் செல்ஃபி படத்திற்கு பின் இருப்பது இயேசு கிறிஸ்துவின் புகைப்படம் என பகிரப்படுவது தவறான தகவல் என கண்டறியப்பட்டது.

இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் (102) கடந்த மாதம் 19-ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் (88) கடந்த மாதம் 26-ம் தேதியும், கடந்த 7-ம் தேதி 3ம் கட்ட தேர்தலும் (93), கடந்த 13-ம் தேதி 4ம் கட்ட தேர்தலும் (96), கடந்த 20-ம் தேதி 5ம் கட்ட வாக்குப்பதிவும் (49) நடைபெற்றது. தொடர்ந்து, நேற்று (மே 25) 6ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

7-ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதியும் நடைபெறவுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவில் பீகார், ஜார்கண்ட், ஜம்மு காஷ்மீர், ஒடிசா, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், ஹரியானா மற்றும் டெல்லி ஆகிய 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. 

6ம் கட்ட தேர்தலில் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர், மத்திய வெளியுரவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் வயநாடு சிபிஐ வேட்பாளர் ஆனி ராஜா உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.

இதில் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி இருவரும் தங்கள் மை வைத்த விரல்களைக் காட்டும் விதமாக செல்ஃபி எடுத்து அதனை ராகுல் காந்தி தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பகிர்ந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த பதிவினை பகிர்ந்த பயனர்கள் சிலர், ராகுல் காந்தி - சோனியா காந்திக்கு பின்னால் இயேசு கிறிஸ்துவை சித்தரிக்கும் படம் இருப்பதாக பகிர்ந்தனர்.

இந்த படத்தை ஒரு “ஜனேதாரி பிராமணர்” ராகுல் காந்தியின் அறையில் இயேசுவின் படம் உள்ளது.. ஒரே அறையில் இந்து கடவுள்களின் படம் இல்லை.. நல்லது!” என்ற தலைப்புடன் பகிரப்பட்டுள்ளது.

உண்மைச் சரிபார்ப்பு:

இதுகுறித்த உண்மையை கண்டறிய நியூஸ்மொபைல் முடிவு செய்தது.

வைரலான படத்தை உன்னிப்பாக ஆய்வு செய்தபோது, ​​அவர்களுக்குப் பின்னால் உள்ள சுவரொட்டியில் மூன்று தனித்துவமான சிவப்பு புள்ளிகள் கண்டறியப்பட்டது. இயேசு கிறிஸ்துவின் படங்களில் இத்தகைய விவரம் அரிதானது. பல்வேறு கேள்விகளை எழுப்பிய இந்த படத்தை, தலைகீழ் படத் தேடல் செய்யப்பட்டது. அப்போது இந்த படம் MeisterDrucke என்ற இணையதளத்தில் கண்டறியப்பட்டது. நிக்கோலஸ் ரோரிச்சின் கலைப்படைப்பான “மடோனா ஓரிஃப்ளம்மா, 1932” என அந்த படம் அடையாளப் படுத்தப்பட்டிருந்தது.

விக்கிஆர்ட் என்ற இணையதளம் நிக்கோலஸ் ரோரிச்சை ஒரு பன்முக தன்மை (ஓவியர், எழுத்தாளர், தொல்பொருள் ஆராய்ச்சியாளர், தியோசோபிஸ்ட் மற்றும் பொது நபர்) கொண்ட புகழ் பெற்ற ரஷ்ய நபர் என விவரித்துள்ளது. இவர் ரஷ்யாவில் தத்துவஞானி, அறிவாளி மற்றும் ஆன்மீக செல்வாக்கு கொண்டவராக கருதப்படுகிறார். ரோரிச்சின் குறிப்பிடத்தக்க கலைப்படைப்புகளில் ஒன்று மடோனா ஓரிஃப்ளம்மா. இது குறியீட்டு பாணியில் அவரது தேர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது. 

முடிவு:

ராகுல் காந்தியின் செல்ஃபிக்குப் பின்னால் இருக்கும் படம் இயேசு கிறிஸ்துவை குறிக்கவில்லை எனவும், மாறாக அது ஒரு கலைப்படைப்பு என நிரூபிக்கப்பட்டுள்ளது.

Note : This story was originally published by ‘NewsMobile’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Advertisement