For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சொத்துக்காக மூதாட்டி கொலை - மகன், பேரன் கைது!

10:47 AM May 21, 2024 IST | Web Editor
சொத்துக்காக மூதாட்டி கொலை   மகன்  பேரன் கைது
Advertisement

ஈரோட்டில் வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டியை தலையணை வைத்து அமுக்கி கொலை செய்த வழக்கில் அவரது மகன் மற்றும் பேரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 

Advertisement

ஈரோடு அடுத்த செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராதா (70) .  இவரது கணவர் இறந்து
விட்ட நிலையில் தனியாக வசித்து வந்துள்ளார்.  இவர்களுக்கு இரண்டு மகள்களும் ஒரு
மகனும் உள்ளனர்.  இந்த நிலையில் ராதாவின் மூத்த மகள் பழனியம்மாள் கடந்த 18-ம்
தேதி அன்று தனது தாயாரை காண வீட்டிற்கு வந்துள்ளார்.  அப்பொழுது மூதாட்டி ராதா
வீட்டில் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

இதனையடுத்து இச்சம்பவம் குறித்து தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பின் நகர காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர்.  தொடர்ந்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில்,  மூதாட்டியின் கழுத்தில் இருந்த 4  1/2 பவுன் தங்க சங்கிலுக்காக தலையணையை முகத்தில் வைத்து அமுக்கி கொலை செய்திருப்பது தெரியவந்தது.

போலீசாரின் தொடர் விசாரணையில் மூதாட்டி ராதாவின் இரண்டாவது கணவர் மூலமாக இடம் விற்பனை செய்து ரூ.40 லட்சம் பணம் மற்றும் சொத்து இருந்ததும்,  இது தொடர்பாக எழுந்த பிரச்னையில் மூதாட்டி ராதாவின் மகன் கணேசன் (52) மற்றும் கணேசனின் மகன் அஜித்குமார் ஆகிய இருவரும் இணைந்து மூதாட்டியை கொலை செய்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து கொலையில் ஈடுபட்டவர்கள் இருவரையும் போலீசார் தேடி வந்தனர்.  இந்த நிலையில்,ஈரோடு மூலப்பாளையம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார் கொலை வழக்கில் தொடர்புடைய கணேசன் மற்றும் அஜித்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags :
Advertisement