தீரன் சின்னமலையின் பிறந்தநாளை ஒட்டி அவரது சிலைக்கு இபிஎஸ் மலர் தூவி மரியாதை!
நம் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியவர்களில் மிக முக்கியமானவர் தீரன் சின்னமலை. ஈரோடு மாவட்டத்தில் உள்ள காங்கேயம் அருகே மேலப்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்த தீரன் சின்னமலையின் இயற்பெயர் தீர்த்தகிரி. தனது இளம் வயதிலேயே வாள் பயிற்சி, வில் பயிற்சி, சிலம்பாட்டம், மல்யுத்தம் என அனைத்து விதமான அடிமுறைகளையும் கற்று தேர்ந்த வீரர் தான் தீரன் சின்னமலை.
ஆங்கிலேயர்களிடமிருந்து, தன் தாய் நிலத்தின் உரிமைகளைக் காத்திட, மைசூர் மன்னன் திப்பு சுல்தானுடன் தன்னை இணைத்துக் கொண்டு, ஆங்கிலேயருக்கு எதிராக திப்பு சுல்தானோடு சேர்ந்து பல கட்ட போராட்டங்ள் நிகழ்த்தி வெற்றி கண்டவர். சுதந்திரப் போராட்ட வீரரான தீரன் சின்னமலையின் 269-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை கிண்டி திரு.வி.க தொழிற்பேட்டை வளாகத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் நிறுவப்பட்டுள்ள அவரது சிலை மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
வீரம் விளைந்த தமிழ் மண்ணில் ஓங்கு புகழ்கொண்ட வீரராகப் பிறந்து, இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராய் இலட்சியமிக்க இளைஞர் படையை கட்டமைத்து,ஆங்கிலேயரை விரட்டியடித்த ஓடாநிலைக் கோட்டையின் ஒப்பற்ற மாவீரர் #தீரன்_சின்னமலை அவர்களின் பிறந்தநாளில் அவர்தம்… pic.twitter.com/vhCgfgVUui
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) April 17, 2025
இந்த நிலையில், கிண்டியில் உள்ள தீரன் சின்னமலையின் சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட இபிஎஸ், “வீரம் விளைந்த தமிழ் மண்ணில் ஓங்கு புகழ்கொண்ட வீரராகப் பிறந்து, இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராய் லட்சியமிக்க இளைஞர் படையை கட்டமைத்து, ஆங்கிலேயரை விரட்டியடித்த ஓடாநிலைக் கோட்டையின் ஒப்பற்ற மாவீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளில் அவர்தம் தியாகத்தையும் வீரத்தையும் போற்றி வணங்குகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.