Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தீபாவளி பண்டிகை : தலைவர்கள் வாழ்த்து..!

தீபாவளி பண்டிகையையொட்டி அரசியல் கட்சித்தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் ஆகியோர் தீபாவளி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
11:22 AM Oct 20, 2025 IST | Web Editor
தீபாவளி பண்டிகையையொட்டி அரசியல் கட்சித்தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் ஆகியோர் தீபாவளி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Advertisement

இந்தியாவில் பரவலான மக்கள் கொண்டாடக்கூடிய பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. அதன்படி இன்று நாடு முழுவதும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இதனை தொடர்ந்து பல்வேறு  அரசியல் கட்சித்தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் ஆகியோர் தீபாவளி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்தில்,

”தீபாவளி திருநாளில் வாழ்த்துக்கள். இந்த தீபத் திருநாள் நம் வாழ்வில் நல்லிணக்கம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவற்றை ஒளிரச் செய்யட்டும். நம்மைச் சுற்றி நேர்மறை உணர்வு நிலவட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின் வாழ்த்தில்,

இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள அனைத்து இந்தியர்களுக்கும் எனது மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பண்டிகை ஏழைகளுக்கும் ஏழைகளுக்கும் உதவவும் ஆதரிக்கவும், அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கொண்டுவரவும் ஒரு வாய்ப்பாகும். தீபாவளியை பாதுகாப்பாகவும், பொறுப்புடனும், சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையிலும் கொண்டாடுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இந்த தீபாவளி அனைவருக்கும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பைத் தரட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

துணைக்குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள வாழ்த்தில்,

நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள அனைத்து இந்தியர்களுக்கும் எனது மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டு, நாம் தீபாவளியைக் கொண்டாடும்போது, ​​எதிர்மறை மற்றும் அதர்மத்தைத் தவிர்த்து நேர்மறை மற்றும் தர்மத்தை ஏற்றுக்கொள்வோம் . இந்த பண்டிகையில் ஒவ்வொரு வீட்டிலும் கூட்டாக ஏற்றப்படும் தீபங்களைப் போலவே, நமது அர்ப்பணிப்பும் அர்ப்பணிப்பும் பாரதத்திற்கான கூட்டு வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி வெளியிட்டுள்ள வாழ்த்தில்,
தீபாவளி பண்டிகை சுபதினத்தில், தமிழ்நாட்டின் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். இந்நாளில் அன்னை லக்ஷ்மி நமக்கு மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் வளத்தை நல்கி, நமது வாழ்க்கையை அன்பு மற்றும் கருணை குணத்தால் நிரப்பி, அமைதி மற்றும் ஒற்றுமையில் வேரூன்றிய ஒரு இணக்கமான சமூகத்தை நாம் வளர்க்க அருள்புரியட்டும்! அனைவருக்கும் மகிழ்ச்சியான, துடிப்பான மற்றும் பாதுகாப்பான தீபாவளி வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 
”மக்கள் அனைவரும் கொண்டாடி மகிழும் பண்டிகைகளில் சிறப்பு மிக்க பண்டிகையாம் தீபாவளித் திருநாளை, மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். இந்த இனிய திருநாளில் நாடெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும்; துன்பங்கள் கரைந்து, ஒளிமயமான எதிர்காலம் பிறக்கட்டும்; வேற்றுமை அகன்று, ஒற்றுமை ஓங்கட்டும்; அனைவரது வாழ்விலும் வளமும் நலமும் பெருகட்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
அமமுக பொதுச்செயளாலர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்தில்,
தீபத்திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அதர்மத்தை அழித்து, தர்மம் வென்றதை உலகிற்கு உணர்த்தும் இந்த தீபாவளித் திருநாளில் நாம் ஏற்றும் ஒளி, அறியாமை எனும் இருளை அகற்றி, அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியையும், வெற்றியையும் பாய்ச்சக்கூடியதாக பிரார்த்திக்கின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
பாரத மக்கள் அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய தினம், வாழ்க்கையில் இருள் நீங்கி, ஒளி பரவ இறைவன் அருள் புரிய வேண்டிக் கொள்கிறேன்! இந்த தீபாவளித் திருநாளில், நாம் அனைவரும் ஒற்றுமையாக ஏற்றும் தீபங்கள், நம் பாரத தேசத்தை இவ்வுலகில் தனித்துவமாக மிளிரச் செய்யட்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் எம்பி வெளியிட்டுள்ள வாழ்த்தில், 

”ஒளிக்கீற்றால் இருள் கிழிக்கும் முயற்சித் திருநாள்; வெளிச்சத்தால் இணைந்திருக்கும் மகிழ்வுப் பெருநாள்; தீதகன்று நன்மைகள் வாழ்வில் பெருக தீபாவளி எல்லோர்க்கும் நலங்கள் தருக என்று தெரிவித்துள்ளaார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

இருள் இன்றுடன் விலகட்டும், மகிழ்ச்சி ஒளி எந்நாளும் பரவட்டும்! இருளை விலக்கி, ஒளி கொடுக்க வரும் தீபஒளித் திருநாளை தமிழ்நாட்டிலும், உலகின் பிற பகுதிகளிலும் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளமார்ந்த தீப ஒளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

 

Tags :
cpradhakrishnanDiwalidiwaliwishdroubathimurmuEPSlatestNewsNainarNagendiranPMModittvdhinakaran
Advertisement
Next Article