For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

டெல்லி : காலாவதியான வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கப்படாது - மத்திய அரசு நடவடிக்கை!

டெல்லியில் வரும் 1ம் தேதி முதல் காலாவதியான வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கப்படாது என்ற உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளது.
07:33 AM Jun 29, 2025 IST | Web Editor
டெல்லியில் வரும் 1ம் தேதி முதல் காலாவதியான வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கப்படாது என்ற உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளது.
டெல்லி   காலாவதியான வாகனங்களுக்கு பெட்ரோல்  டீசல் வழங்கப்படாது   மத்திய அரசு நடவடிக்கை
Advertisement

டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, காற்று மாசு அதிகரிப்பதற்கு பழைய வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை முக்கிய காரணமாக உள்ளது. இதன் காரணமாக, 10 ஆண்டுகளை கடந்த டீசல் வாகனங்கள், 15 ஆண்டுகளை கடந்த பெட்ரோல் வாகனங்களை பயன்படுத்த டெல்லியில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

முதலில் தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்த தடையை விதித்தது. அதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றமும் அதை உறுதி செய்தது. பின்னர், மத்திய அரசும் அதற்கான புதிய சட்டங்களை பிறப்பித்தது.

டெல்லியில் சாலையில் இயக்கப்படும் இதுபோன்ற வாகனங்கள் கண்டறிந்து, பறிமுதல் செய்யப்பட்டு உடைப்பதற்கு அனுப்பப்படுகிறது. அதேபோல், வெளிமாநிலங்களில் இருந்து டெல்லிக்குள் நுழையும் இதுபோன்ற வாகனங்களுக்கு முதல் முறையாக அபராதம் விதிக்கப்படுகிறது. மீண்டும் அதே தவறை செய்தால், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.

இந்த நிலையில் காலாவதியான வாகனங்களுக்கு டெல்லியில் உள்ள பங்க்குகளில் பெட்ரோல், டீசல் வழங்குவதை ஜூலை முதல் நிறுத்துமாறு கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசின் காற்று தர மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி, டெல்லியில் மொத்தம் 62 லட்சம் காலாதியான வாகனங்கள் உள்ள நிலையில், அதில் 41 லட்சம் இருசக்கர வாகனங்களும், 18 லட்சம் 4 சக்கர வாகனங்களும் உள்ளன.

இந்த வாகனங்களுக்கு இனி பெட்ரோல், டீசலை பெட்ரோல் பங்குகள் வழங்காது. இதற்காக 500-க்கும் மேற்பட்ட 'பங்க்'களில் சிறப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

Tags :
Advertisement