For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரிதரன் அதிமுகவில் இருந்து நீக்கம் - இபிஎஸ் நடவடிக்கை!

09:25 PM Jul 20, 2024 IST | Web Editor
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரிதரன் அதிமுகவில் இருந்து நீக்கம்   இபிஎஸ் நடவடிக்கை
Advertisement

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான கவுன்சிலர் ஹரிதரன் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். 

Advertisement

சென்னை பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி பெரம்பூரில் அவர் புதிதாக கட்டிவரும் வீடு அருகே அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் போல் வந்த கும்பல், கட்டுமான பணியை பார்வையிட்டுக் கொண்டிருந்த ஆம்ஸ்ட்ராங்கை வெட்டி சாய்த்துவிட்டு தப்பி ஓடினர். தமிழ்நாடு முழுவதும் இந்த படுகொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கொலை வழக்கில் இதுவரை சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞரும் அதிமுகவில் இருந்து தற்போது நீக்கப்பட்டவருமான பெண் தாதா மலர்க்கொடி மற்றும் மற்றொரு வழக்கறிஞர் ஹரிதரன், திருநின்றவூரைச் சேர்ந்த அருளின் கூட்டாளியும் திமுக பிரமுகரின் மகனுமான சதீஷ், பாஜக முன்னாள் நிர்வாகியான அஞ்சலை ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதன்படி ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.

இதையும் படியுங்கள் : “அதிகாரத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் ரவுடி என்றால், நாங்கள் ரவுடிகள் தான்” - இயக்குநர் பா.ரஞ்சித் ஆவேசம்!

இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், திருவள்ளூரை சேர்ந்த கடம்பத்தூர் அதிமுக கவுன்சிலர் ஹரிதரனை  காவல்துறையினர் இன்று கைது செய்தனர். இந்நிலையில், கைதான அதிமுக கவுன்சிலர் ஹரிதரனை அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Tags :
Advertisement