For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அமித்ஷா குறித்து சர்ச்சை பேச்சு: ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு ஒத்திவைப்பு!

05:04 PM Apr 02, 2024 IST | Web Editor
அமித்ஷா குறித்து சர்ச்சை பேச்சு  ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு ஒத்திவைப்பு
Advertisement

மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணை ஏப்ரல் 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisement

கடந்த 2018-ம் ஆண்டு மே 18-ம் தேதி, பெங்களூருவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமித் ஷாவுக்கு எதிராக ராகுல் காந்தி பேசிய பேச்சுக்காக அதே ஆண்டு ஆகஸ்ட் 4-ம் தேதி அவர் மீது அவதூறு வழக்கு பதியப்பட்டது. பாஜக தலைவர் விஜய் மிஷ்ரா இந்த வழக்கை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் கடந்த பிப். 20-ம் தேதி உத்தரப் பிரதேசத்தின் சுல்தான்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு நடைபெற்றது. விசாரணைக்கு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று ராகுல் காந்திக்கு சம்மனும் அனுப்பப்பட்டிருந்தது. பாரத் ஜடோ நியாய யாத்திரையில் இருந்த ராகுல் காந்தி, நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் கோரினார். இரு தரப்பின் வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து அவர் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில், இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார். கடந்த பிப். 23-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "பாஜக தலைமை, பொய்யர்களால் ஆனது என்றும், அதன் தலைவர்களை கொலை குற்றவாளிகள் என்றும் ராகுல் விமர்சித்திருக்கிறார். இது நிச்சயமாக அவதூறுதான்" என்று கூறியிருந்தனர். இதனையடுத்து, மனுவை அவர்கள் தள்ளுபடி செய்தனர். இது ராகுல் காந்திக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது. மேலும் நாளை மறுநாள் (ஏப். 4) விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

வழக்கின் மீதான விசாரணை சுல்தான்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், கேரளத்தின் வயநாடு மக்களவைத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய நாளை (ஏப்ரல் 4) கடைசி என்பதால் ராகுல் காந்தியின் விசாரணை மற்றொரு நாள் தள்ளிவைக்கக் கோரி,  காங்கிரஸ் தலைவரின் வழக்கறிஞர் காஷி பிரசாத் சுக்லா நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்தார். இதையடுத்து, ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு மீதான விசாரணை ஏப்ரல் 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement