நாட்டை வடக்கு, தெற்கு என பிரிக்கப்பார்க்கிறது காங்கிரஸ் - பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
காங்கிரஸ் ஆட்சியில் 12-வது இடத்தில் இருந்த இந்திய பொருளாதாரம், பாஜகவின் ஆட்சியில் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளதாகவும், நாட்டை வடக்கு, தெற்கு என காங்கிரஸ் பிரிக்கப்பார்ப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜன. 31-ம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப். 1-ம் தேதி இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இதனிடையே, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்குப் பதிலளித்து பிரதமர் மோடி மாநிலங்களவையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
“மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்த போது எமர்ஜென்சி உட்பட எண்ணற்ற ஒடுக்குமுறைகள் நடந்தன. நக்சலைட் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு காங்கிரஸ் ஆட்சியாளர்கள் தான் காரணம். நாட்டை வடக்கு, தெற்கு என காங்கிரஸ் பிரிக்கப் பார்க்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் இந்திய பொருளாதாரம் 12-வது இடத்தில் இருந்தது. பாஜகவின் 10 ஆண்டு கால ஆட்சியில் இந்திய பொருளாதாரம் 5-வது இடத்திற்கு வந்துள்ளது.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.