For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திமுக பிரமுகர் வீட்டில் வெடிகுண்டு வீசிய விவகாரம் - இருவரை தேடி ஆந்திரா விரைந்த போலீசார்!

11:27 AM Aug 16, 2024 IST | Web Editor
திமுக பிரமுகர் வீட்டில் வெடிகுண்டு வீசிய விவகாரம்   இருவரை தேடி ஆந்திரா விரைந்த போலீசார்
Advertisement

திமுக பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் இருவரை தேடி போலீசார் ஆந்திரா விரைந்துள்ளனர். 

Advertisement

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அபிஷா பிரியவர்ஷினி. இவரது கணவர் ஜெகன். திமுக பிரமுகரான இவரது வீட்டில் நேற்று சிலர் நாட்டு வெடிகுண்டு வீசி உள்ளனர். இந்த வெடிகுண்டு வீட்டின் வெளிப்புற கேட்டில் விழுந்தததை அடுத்து உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால், வெடித்த நாட்டு வெடி குண்டால் ஜன்னல் கண்ணாடி உள்ளிட்டவை சேதமடைந்தன.

சப்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தபோது 6 பேர் கொண்ட கும்பல் அவரின் வீட்டின் முன்பாக நிருத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு  தப்பி ஓடினர். பின்னர் அந்த கும்பல் அருகில் இருந்த பார்க்கிங் யார்டில் வெடிகுண்டு வீசியதுடன், ஓட்டுநர் சிவா என்பவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினர். திமுக பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் குறித்து சோழவரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திமுக பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு! - News7 Tamil

அதே போல், அந்த கும்பல் சிறுனியம் காலனி பகுதியில் உள்ள சரண்ராஜ் என்பவரின் காரை உடைத்து விட்டு அங்கு இருந்தவர்களை கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பிரபல ரவுடி சேதுபதியின் கூட்டாளியான டியூக் கார்த்திக் உடன் இருந்த ஆறு பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடினர். இந்த சூழலில் அஜித் குமார் மற்றும் நித்தீஸ்வரன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் பிரபல ரவுடி சேதுபதியின் கூட்டாளிகள் இருவரை தேடி ஆந்திர மாநிலத்திற்கு காவல்துறையினர் விரைந்துள்ளனர்.

Tags :
Advertisement