For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"பாஜக ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடையை மூடிவிட்டு கள்ளுக்கடைகள் திறக்கப்படும்!" - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

04:45 PM Jan 26, 2024 IST | Web Editor
 பாஜக ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடையை மூடிவிட்டு கள்ளுக்கடைகள் திறக்கப்படும்     பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
Advertisement

தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் முதற்கையெழுத்து டாஸ்மாக் கடையை மூடிவிட்டு கள்ளுக்கடைகள் திறக்கப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisement

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில்  இன்று 81 வது நாளாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை , ‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரை மேற்கொண்டார். இதையடுத்து, பண்ருட்டி அடுத்த படை வீட்டம்மன் அருகே யாத்திரையை தொடங்கி பண்ருட்டி பேருந்து நிலையத்தில் யாத்திரையை முடிக்கிறார். அதனைத்தொடர்ந்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:

தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் முதற்கையெழுத்து டாஸ்மாக் கடையை மூடிவிட்டு கள்ளுக்கடைகள் திறக்கப்படும். வள்ளலாரின் கொள்கை கருணை மற்றும் வடலூரில் போலீசாரின் தடியடி நடத்தப்பட்டது ஏற்க முடியாது.

இதையும் படியுங்கள்; ‘கல்விக் கொடையாளர்’ ஆயி அம்மாள், பள்ளி மாணவன் டேனியலுக்கு விருது – குடியரசு தின விழாவில் கெளரவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மேலும் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபரபு  தாக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட செய்தியாளரை களங்கப்படுத்தக் கூடாது. உண்மை செய்திகள் வெளியிடுபவர்கள் தாக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்நிலையில், பாதிக்கப்பட்டவரை கலங்கப்படுத்தும் முயற்சியில் மாநில அரசும், காவல்துறையும் இறங்கி உள்ளது.

INDIA - கூட்டணி ஒரு சீட்டுக்கட்டு போல், ஒவ்வொரு முறை குலுக்கும் போதும் ஜோக்கர் போல் ஒரு கட்சி வெளியேறுகிறது. மக்கள் மன நிலைக்கு எதிராக பிரதமர் மோடியை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக சேர்ந்தால் இந்த நிலை தான் ஏற்படும் இவ்வாறு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

Tags :
Advertisement