Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பாஜக நிர்வாகி கொலை வழக்கு |  தப்ப முயன்றவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய போலீசார்!

10:01 PM Jul 29, 2024 IST | Web Editor
Advertisement

சிவகங்கையில் பாஜக நிர்வாகி கொலைசெய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த நபர் தப்ப முயன்றபோது, போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.

Advertisement

சிவகங்கை மாவட்டம், வேலாங்குளத்தைச் சோ்ந்தவா் செல்வக்குமாா் (53).  இவா் அதே பகுதியில் செங்கல் சூளை நடத்தி வந்துள்ளார்.  மேலும் இவர் பாஜக கூட்டுறவுப் பிரிவு மாவட்டச் செயலராகவும் இருந்து வந்தாா்.  இந்த சூழலில் இவா் நேற்று முன்தினம் இரவு தனது இரு சக்கர வாகனத்தில் சிவகங்கை - இளையான்குடி சாலையில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது,  அடையாளம் தெரியாத நபா்கள் சிலர், இவரை வழிமறித்து அரிவாளால் வெட்டினர்.  இதில் படுகாயமடைந்த செல்வக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.    இதனையடுத்து, சிவகங்கை தாலுகா போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து, 5 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளைத் தேடி வந்தனா்.  இதனையடுத்து இந்த கொலையில் சமந்தப்பட்ட 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், விசாரணையின் போது கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவரான வசந்த் என்ற நபர் காவலரை தாக்கி விட்டு தப்ப முயற்சித்ததாக தெரிகிறது. இதனையடுத்து போலீசார் வசந்தை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.  இதனிடையே, வசந்த் தாக்கியதில் சார்பு ஆய்வாளர் பிரதாப்புக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  தொடர்ந்து, காவலர் பிரதாப் மற்றும் வசந்த் ஆகிய இருவரும், சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags :
ArrestBJPCrimeinvestigationMurderPolicesivaganga
Advertisement
Next Article