For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“பூவை ஜெகன்மூர்த்தியை அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் கைது செய்ய முயற்சி” - இபிஎஸ் கண்டனம்!

பூவை ஜெகன்மூர்த்தியை அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் கைது செய்ய முயற்சி என எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
09:49 PM Jun 14, 2025 IST | Web Editor
பூவை ஜெகன்மூர்த்தியை அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் கைது செய்ய முயற்சி என எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
“பூவை ஜெகன்மூர்த்தியை அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் கைது செய்ய முயற்சி”   இபிஎஸ் கண்டனம்
Advertisement

புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி வீட்டில் ஆட்கடத்தல் விவகாரம் தொடர்பாக விசாரிக்க, பூந்தமல்லியை அடுத்த ஆண்டர்சன்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் போலீசார் குவிக்கப்பட்ட. சம்பவத்தை சுட்டிக்காட்டி திமுக அரசுக்கு எதிக்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், “புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், KV குப்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்தியை திமுக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அராஜகப் போக்கைக் கையாண்டு கைது செய்ய முயற்சிப்பதற்கு எனது கடும் கண்டனம். அஇஅதிமுக எப்போழுதும், எந்தக் குற்றத்தையும் ஆதரிக்கப் போவதில்லை.

ஆனால் மதுரை, வி. சத்திரப்பட்டி காவல் நிலையத்தையே பாதுகாக்க திராணியற்ற முதலமைச்சர், எங்கள் கூட்டணிக் கட்சித் தலைவரை மிரட்டுவதற்காக மட்டும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் கொண்ட Battalion-ஐ ஏன் அனுப்ப வேண்டும் ? பட்டியலின மக்களின் குரலாக சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் ஒலிக்கும் ஜெகன்மூர்த்தியை  குறிவைத்து நடத்தப்படும் இந்த அரசியல் காழ்ப்புணர்வு நடவடிக்கை என்பது, நாளுக்கு நாள் வலுவடைந்து வரும் அதிமுக  கூட்டணியைக் கண்டு ஆளும் திமுக அரசு பயந்து வருவதையே காட்டுகிறது.

இப்படிப்பட்ட கைது முயற்சிகளால் அதிமுக கூட்டணி கட்சிகளை மிரட்டி, தங்கள் வழிக்கு கொண்டு வரலாம் என்று பகல்கனவு காணும் தீயசக்தி திமுக-வின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது! ஆட்சி, அதிகாரம் என்பது மக்களுக்கு நன்மை செய்ய மட்டும் தான் இருக்கிறதே தவிர, எதிர்க்கட்சிகளை ஒடுக்க முயல்வதற்கு அல்ல என்பதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உணரவேண்டும். இந்த கொடுங்கோன்மைக்கெல்லாம் உரிய பதிலை தமிழ்நாட்டு மக்கள் 2026-ல் திமுக-விற்கு நிச்சயமாக தருவார்கள்”

இவ்வாறு எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement