For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அண்ணாமலை மீது மதுரை காவல் ஆணையரிடம் #ADMK புகார்!

01:54 PM Aug 27, 2024 IST | Web Editor
அண்ணாமலை மீது மதுரை காவல் ஆணையரிடம்  admk புகார்
Advertisement

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மதுரை மாநகர காவல் ஆணையரிடம் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அதிமுக மருத்துவ அணி மாநிலச் செயலாளர் சரவணன் சார்பில் இந்த புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அண்ணாமலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும், அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் சட்ட ஒழுங்கு பாதிப்பு ஏற்படுத்தும் நோக்கத்தோடு தொடர்ச்சியாக அதிமுகவையும், செயலாளரையும் தரக் குறைவாக பேசி உள்ளார்.

எடப்பாடி பழனிசாமியை அவமானப்படுத்தும் நோக்கிலும், பொது அமைதியை சீர் குலைக்கும் வகையிலும் அண்ணாமலை தொடர்ந்து பேசி வருகிறார். அதிமுக குறித்தும், எடப்பாடி பழனிசாமி மீதும் அவதூறு பரப்பி வரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :
Advertisement