Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நடிகை அதுல்யா வீட்டில் திருட்டு! பணிப்பெண் உட்பட இருவர் கைது!

07:03 PM Jul 04, 2024 IST | Web Editor
Advertisement

நடிகை அதுல்யா ரவியின் வீட்டில் திருட்டு நடந்ததையடுத்து, அவரின் வீட்டில் வேலை செய்து வந்த பெண் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.  

Advertisement

‘காதல் கண் கட்டுதே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் அதுல்யா ரவி. அதன் பின்னர் இவர் ஏமாளி, நாடோடிகள் 2, அடுத்த சாட்டை  போன்ற படங்களில் நடித்துள்ளார்.  இவர் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு கவனம் பெறுவார். கோவையைச் சேர்ந்த இவர் வடவள்ளியில் தன் தாயுடன் வசித்து வருகிறார்.

கோவையைச் சேர்ந்த அதுல்யா ரவி, தனது தாயார் விஜயலட்சுமியுடன் வடவள்ளி பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில், அதுல்யா ரவி வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஸ்போர்ட் மற்றும் ரூ.2000 பணம் திருடு போயியுள்ளதாகக் கூறப்படுகிறது.  இதையடுத்து, வடவள்ளி காவல் நிலையத்தில் இந்தச் சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டது.

 

இந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில், அதுல்யா ரவி வீட்டில் வேலை செய்து வந்த செல்வி (46) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது செல்வி முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில், செல்வி தனது தோழியுடன் சேர்ந்து பாஸ்போர்ட் மற்றும் பணத்தை திருடியது தெரியவந்தது.

இதனையடுத்து, செல்வி மற்றும் அவரது தோழியான சுபாஷினி (40) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.1,500 பணத்தை கைப்பற்றினர்.  மேலும் அவர்களிடம் இருந்து பாஸ்போர்ட்டை மீட்பதற்கான விசாரணையை போலீசார் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

Tags :
Actress AthulyaArrestAthulya RaviCoimbatoreinvestigationPassportPolice
Advertisement
Next Article