For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கோவையில் பச்சிளம் குழந்தை சடகமாக மீட்பு - காவல்துறையினர் தீவிர விசாரணை!

09:41 PM Jul 07, 2024 IST | Web Editor
கோவையில் பச்சிளம் குழந்தை சடகமாக மீட்பு   காவல்துறையினர் தீவிர விசாரணை
Advertisement

கோவையில் பிறந்த சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தை சடகமாக மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

கோயம்புத்தூர் மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியில் உள்ள நஞ்சப்பா நகர் 5வது வீதியில் உள்ள ஒரு காலி இடத்தில் ஆண் குழந்தை உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளது. இந்நிலையில், உயிரிழந்து கிடந்த ஆண் குழந்தையை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்த சிங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர், குழந்தையின் சடலத்தை மீட்டு இஎஸ்ஐ மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதையும் படியுங்கள் : ஓமலூரில் மாணவர்கள் உருவாக்கிய செயற்கைக்கோள் – அடுத்த கட்ட ஆய்வுக்கான திட்டமிடல் குறித்து கூட்டம்!

சடலாக கிடந்த குழந்தை யாருடையது? பிறந்த சில நாட்களே ஆன அந்த குழந்தையை வீசி சென்றது யார்? குழந்தை எப்படி இறந்தது என்பது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பிறந்த சில நாட்களே ஆன அந்த குழந்தை சடலமாக வீதியில் இருந்து மீட்கப்பட்டது அப்பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Advertisement